Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வங்கி ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

          அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் தமிழ்நாடு கிளை பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

          மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் மறைமுகவரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். அத்துடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்வேறு வகையில், பயனடையும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள பட்ஜெட்டை கண்டித்தும், வங்கிகளையும் சீர்திருத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
அந்தவகையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்தியன் வங்கி எதிரில் நாளை மாலை 5.15 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அனைத்து வங்கி ஊழியர்களும் கலந்து கொள்கின்றனர். இதுதவிர தமிழகத்தில் காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் புதுச்சேரியிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive