Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

40 ஆயிரம் சத்துணவு, அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: பாஜக

         தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் அங்கன்வாடி மையங்களை நம்பியுள்ள குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சத்துணவு வழங்குவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே, 40 ஆயிரம் காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துணவுக்காக காய்கறி வாங்கவும் சமைக்கவும் தலா ரூ. 1.30-ம், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தலா ரூ. 1.40-ம் தமிழக அரசு வழங்குகிறது.
இப்போதுள்ள விலைவாசியில் இநதத் தொகையில் காய்கறி வாங்கவோ, சமைக்கவோ முடியாது. இதனால் ஊட்டச்சத்து இல்லாமல் குறைகளோடு குழந்தைகள் வளர வேண்டிய நிலை ஏற்படும்.
சத்துணவு, அங்கன்வாடி மையங்கள் மிகச் சிறப்பாக செயல்படவும், குழந்தைகளுக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைக்கவும் காய்கறிகள் வாங்கவும், சமைக்கவும் ஒரு குழந்தைக்கு ரூ.5 ஒதுக்க வேண்டும். இதை செலவாகப் பார்க்காமல் ஏழைக் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் செய்யும் முதலீடாகப் பார்க்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive