Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்கள் கேலி செய்ததால் பிளஸ்–2 மாணவி தீக்குளித்து தற்கொலை

     மாணவர்கள் கேலி செய்ததால் அவமானம் அடைந்த பிளஸ்–2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்தார்.
வாய்த்தகராறு
சென்னை அண்ணாநகர் மேற்கு பாடிகுப்பம் அங்காளபரமேஸ்வரி கோவில் தெருவை சேர்ந்த ரவி கோயம்பேடு மார்க்கெட்டில் கூலிவேலை செய்கிறார். இவருடைய மனைவி அஞ்சலை. இவர்களது மகள் செல்வி (வயது 17) எழும்பூரில் உள்ள ஒரு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்தார்.
தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், கடந்த 6–ந் தேதி பள்ளியில் இருந்து திரும்பும்போது, சக மாணவிகளுக்கும், செல்விக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதுபற்றி அந்த மாணவிகள் வேறொரு பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் தெரிவித்தனர்.
தீக்குளிப்பு
இதையடுத்து நேற்று முன்தினம் ஆங்கில முதல்தாள் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த செல்வியை, மாணவர்கள் வழிமறித்து தலைமுடியை பிடித்து இழுத்தும், தலையில் கொட்டியும் கேலி செய்தனர். இதை ஏராளமான மாணவிகள் வேடிக்கை பார்த்தனர்.
இதனால் அவமானம் அடைந்த செல்வி அங்கேயே அழுதார். வீட்டிலும் கவலையுடன் காணப்பட்டார். ஆங்கிலம் 2–ம் தாள் தேர்வு இருந்த நிலையில், செல்வி நேற்று காலை வீட்டு குளியலறையில், தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
சாவு
உடல் முழுவதும் தீ பரவியது. அலறல் சத்தம் கேட்டு பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும் ஓடிச் சென்று தீயை அணைத்தனர். உடல் கருகிய செல்வியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வியின் உயிர் பிரிந்தது.
திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிளஸ்–1 மாணவர்கள் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive