திருவள்ளுவர் பல்கலைக்கழக செயல்பாடுகள்
குறித்த அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் வெளியிட பரிசீலனை செய்யுமாறு,
அப் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் திருநகரைச் சேர்ந்த இளங்கோவன்
என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: திருவள்ளுவர்
பல்கலைக்கழகம் பொதுவானது. ஆனால், பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள், அதில்
கற்றுத் தரப்படும் படிப்புகள், அதில் பணிபுரிபவர்களின் விவரம், இதர
கட்டமைப்பு வசதிகள் என தேவையான தகவல்கள் ஏதும் பல்கலைக்கழகத்தின்
இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.
உயர் கல்வி குறித்து பொது மக்கள் தெரிந்து
கொள்வதற்கான எந்த ஒரு தகவல்களும் அதில் இல்லை. எனவே, திருவள்ளுவர்
பல்கலைக்கழகம் தொடர்பான அனைத்து தகவல்களையும் அதன் இணையதளத்தில் வெளியிட
உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல்,
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு
விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கடந்த மாதம்
அளித்த கோரிக்கை மனுவை ஒரு மாதத்துக்குள் பரிசீலனை செய்ய வேண்டும். அனைத்து
தகவல்களையும் இணையதளத்தில் வெளியிட பரிசீலனை செய்ய வேண்டும் என
உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...