Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வு சமயத்தில் தாமதமாக வந்த பயிற்சி கையேடு; ஆசிரியர்கள் அதிருப்தி

              பள்ளிகளில், மாதிரி தேர்வுகள் நடந்துவரும் நிலையில், ஆசிரியர் பயிற்சி கையேடு வினியோகிக்கப்பட்டு வருவது, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

              அனைவருக்கும் கல்வி இடைநிலைக்கல்வித்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஒன்பது, பத்தாம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு, எளிமையான முறையில் பாடங்களை கற்பிப்பது சார்ந்த, பயிற்சி கையேடு பாடவாரியாக வினியோகிக்கப்படும். நடப்பு கல்வியாண்டிற்கான, பயிற்சிகள் கடந்த 2014 நவ., மற்றும் டிச., மாதங்களில் நடந்தது. பயிற்சிகளின் முடிவில் வழங்கவேண்டிய கையேடு, தற்போது தான், மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது. அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கு, தமிழ் மற்றும் ஆங்கில வழியில் புத்தகங்கள் வந்துள்ளன.

              பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் கூறுகையில், '2014-15ம் கல்வியாண்டிற்கான பயிற்சி கையேடு, இப்போது தான் வினியோகிக்கப்பட்டுள்ளது. பாடங்கள் நடத்தும் சமயத்தில் கிடைத்திருந்தால், ஆசிரியர்கள் கற்பித்தலில் சில மாற்றங்களை ஏற்படுத்த வசதியாக அமைந்திருக்கும். ஆனால், பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில், பயிற்சி கையேடுகள் வினியோகிப்பதில் பலனில்லை, என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive