Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நான்கு ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் நியமனம் - ஆளுநர் உரை

           தமிழக அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக ஆளுநர் உரையில் கூறியதாவது:

அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த 4 ஆண்டுகளில் 182 புதிய தொடக்க பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல் 1,317 நடுநிலை, உயர் நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 76,338 கூடுதல் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இடைநிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், இடையில் நிற்றலைக் குறைப்பதற்காக சிறப்பு ஊக்கத் தொகை, விலையில்லா பாடப் புத்தகங்கள், நான்கு சீருடைத் தொகுப்புகள், மிதிவண்டிகள் போன்றவற்றுக்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8 ஆயிரத்து 749 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

நான்கு ஆண்டுகளில் 53 கல்லூரிகள்: கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்காக தமிழக அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 38 கலை அறிவியல் கல்லூரிகள், 11 பலதொழில்நுட்பவியல் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 796 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 10 ஆயிரத்து 204 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். உயர்கல்வி சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 21 சதவீதமாகவும், தமிழகத்தில் 42 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது என ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.




5 Comments:

  1. என் இனிய நண்பர்களே.
    சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை விரைவில் நடத்தி முடிக்க இருதரப்பும் தயார்நிலையில் உள்ளனர்.
    எனவேதான் மார்ச் 26 ல் வரிசைபடுத்தப்பட்ட வழக்கின் விசாரணை திருமதி.லாவண்யா அவர்களின் வழக்குறைஞர் திரு.G.S. chennai அவர்கள் வழக்கின் அவசரத்தை நீதியரசர் திரு. இப்ராகிம் கலிஃபுல்லா அவர்களிடம் எடுத்துரைத்து தற்போது வழக்கு மார்ச் 9 அன்றே வரிசைபடுத்தப்பட்டுள்ளது. எஎனவே மிக விரைவிலேயே வழக்கு இறுதி நிலையை எட்டும் என எதிர்பார்க்கலாம்.
    யாருக்கும் பாதிப்பில்லாமல் ஏற்கனவே பாதிக்கப்பட்டு மனஉளைச்சலில் இருக்கும் என் இனிய நண்பர்களுக்கும் பணி கிடைக்கும் நல்ல தீர்ப்பாக அமையவேண்டும்.


    புதிதாக PG Trb ஏதும் தற்போது வராது.

    ஒருவேளை பட்ஜெட்டில் அறிவிப்பு வந்தாலும் மிகவும் சொற்ப இடங்களே இருக்கலாம் அதற்கும் வாய்ப்புகள் குறைவே.

    நீதிமன்ற வழிகாட்டுதல் இன்றி இனி TET நடக்காது.

    பணிநியமனமும் புதிதாக நடக்காது.

    ReplyDelete
    Replies
    1. Pls say regarding pg trb welfare appointment.....

      Delete
  2. Pls intha mathiri government fake news vidathinga tet pass pannium vacancy illama nanga kasttathula irukkom ungal arasiyal perumaikaga engala kastta paduthathinga itha chinna calculation kuda engala intha government amatrra ninaikkuthu 😒😔

    ReplyDelete
  3. Super comedy from the governer

    ReplyDelete
  4. Padasalai Asiriyar Avargalae Botany subject Final key kku Eathiraga yaaravathu case pottirukkaangala , Second list vara vaaippu irukka Thayavu seithu detail Eathavathi therincha theriviyunga please sir.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive