சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்
முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வினை சென்னை மாவட்டத்தில் 15
ஆயிரத்து 49 தேர்வர்கள் 34 மையங்களில் எழுத உள்ளனர். தேர்வு மையங்களில்
தேவையான அடிப்படை வசதிகளும், மாநகர போக்குவரத்து கழகத்தினால் தேர்வு
மையங்களுக்கு செல்வதற்கேற்ப பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,
தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர், மின்னணு கைக்கடிகாரம் ஆகியவற்றை
எடுத்து வரக்கூடாது என்றும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வர்களுக்கு
வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்றிட வேண்டும் என்றும் சென்னை
மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தகவல் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி மக்கள் தொடர்பு
அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...