Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றுத் திறனாளிகள் வழக்கில் மாநில ஒருங்கிணைப்பு குழுவை ஒரு மாதத்துக்குள் கூட்ட வேண்டும்

          மாற்றுத் திறனாளிகளை ஒருங்கிணைப்பற்கான மாநில ஒருங்கிணைப்புக் குழுவை ஒரு மாதத்துக்குள் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.
 
               சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் ஆர்.முகமது நஸ்ருல்லா என்பவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் 2 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாணவர்கள் போராட் டம் நடத்தினர்.
 
         அவர்கள் அமைதியாக போராட்டம் நடத்தினர். ஆனால், அவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி சென்னைக்கு வெளியே 70 கி.மீ., 80 கி.மீ. தொலைவுக்கு அப்பால் விட்டுவிட்டு வருகின்றனர். 

             ஒருநாள், இரவு நேரத்தில் ஒரு சுடுகாடு அருகே அவர்களை விட்டு விட்டனர். உயர் நீதிமன்றம் இதில் தலையிட்டு பார்வையற்ற மாணவர்கள் மீது நடத்தும் தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார். இந்த கடிதம் பொதுநல மனுவாக எடுத்துக் கொண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சென்னை போலீஸ் ஆணையர் சார்பில், கிழக்கு மண்டல இணை ஆணையர் ஆர்.தினகரன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகள் முழுவதும் அப்படியே பின்பற்றப்படுமா, சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் இது பொருந்துமா என்பதை போலீசார் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1955ன்படி, மாற்றுத்திறனாளிகளை ஒருங்கினைப்பதற்கு எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. அதனால், ஒரு மாதத்துக்குள் மாநில ஒருங்கினைப்புக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். மேலும், மாற்றுத் திறனாளிகள் போராட்டம் குறித்த வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப் பட வேண்டும். இது தவிர வேறு உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive