Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாடம் நடத்தாமல் அரட்டை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்': கடலூர் சி.இ.ஓ., அதிரடி உத்தரவு


          பள்ளிக்கு வந்தும், பாடம் நடத்தாமல் பொழுதை ஓட்டிய பட்டதாரி ஆசிரியரை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) உத்தரவிட்டார்.


             கடலூர் அடுத்த சாமியார்பேட்டையில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, வரலாறு பட்டதாரி ஆசிரியராக, நந்தகுமார் என்பவர் வேலை பார்க்கிறார். இவர் தினமும், பள்ளிக்கு வந்தாலும், பாடம் எடுப்பதில்லை என கூறப்படுகிறது. இது குறித்து, வகுப்பு மாணவர்கள், கடந்த, 2ம் தேதி, கலெக்டரை சந்தித்து, புகார் தெரிவித்தனர். 'பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் வரலாறு பாடங்களை, ஆசிரியர் முடிக்கவில்லை. நாங்கள், வரலாறு பாடத்தில் தேர்ச்சி பெறுவோமா என்பது சந்தேகமாக உள்ளது' என, கலெக்டரிடம் தெரிவித்தனர். மாணவர்களைத் தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும், கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, கலெக்டர், சுரேஷ் குமாரின் உத்தரவின்படி, முதன்மைக் கல்வி அலுவலர், பாலமுரளி, சாமியார்பேட்டை பள்ளியில் விசாரணை நடத்தினார். அதில், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. இதனால், ஆசிரியர், நந்தகுமாரை, 'சஸ்பெண்ட்' செய்து, நேற்று, சி.இ.ஓ., உத்தரவிட்டார். நந்தகுமார், ஏற்கனவே நெல்லிக்குப்பம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றியபோது, இதே குற்றச்சாட்டின் பேரில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.




1 Comments:

  1. சாமியார்பேட்டை, அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் வரலாறு பட்டதாரி ஆசிரியரான் நந்தகுமார் தினமும், பள்ளிக்கு வந்தாலும், பாடம் எடுப்பதில்லை என கூறப்படுகிறது. இது குறித்து, வகுப்பு மாணவர்கள், கடந்த, 2ம் தேதி, கலெக்டரை சந்தித்து, புகார் தெரிவித்தனர். 'பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் வரலாறு பாடங்களை, ஆசிரியர் முடிக்கவில்லை. நாங்கள், வரலாறு பாடத்தில் தேர்ச்சி பெறுவோமா என்பது சந்தேகமாக உள்ளது' என, கலெக்டரிடம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும், கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். இங்கு தான் சந்தேகம். மாணவர்க்ள் கலெக்டரை பார்த்த போது அவர்க்ள் வருகை பதிவு எப்படியுள்ளது. தலைமையாசிரியர் என்ன செய்து கொண்டுள்ளார். த.ஆ அக்கறையில்லையா? பெற்றோர் ஆசிரியர் கழகம் த.ஆ ருக்கு தெரியாமல் எப்படி வ்ருவாய் மாவட்ட ஆட்சியரை அணுகினர். எனவே இதில் த.ஆ ரும், பெ.ஆ.க மும் தான் மாணவர்களை திசைதிருப்பி க்லெக்டரை பார்க்க அனும்தித்திருக்கவேண்டும். போகும்போது தவறி ஏதாவது மாணவர்க்ள் விபத்துக்குளாயிருக்கும் பட்சத்தில் த.ஆ தலையை உருட்டியிப்பார்களோ? எதற்கும் உள்ளூரிலேயே பிரச்சனை முடிக்கவேண்டும். எனவே த.ஆ க்கும் சேர்த்து சஸ்பெண்ட் செய்திருக்கவேண்டும். இதுபோல் எத்தனையோ ஆசிரியர்கள் கையெழுத்து போட்டுவிட்டு அரசியலில் ஆர்பாட்டம் நடக்கும்போது மைக்கில் அரசை விமர்ச்சித்து கொண்டுள்ளதையும் அரசு கவனித்து களைஎடுக்க் வேண்டும். கலெக்டர், சுரேஷ் குமாருக்கும், முதன்மைக் கல்வி அலுவலர், பாலமுரளிக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive