Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியை தாக்கப்பட்ட சம்பவம்: பள்ளியில் இருந்து மாணவன் அதிரடி நீக்கம்

              மதுரவாயல் மார்க்கெட் அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,200 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கடந்த 1ம் தேதி 12ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை லட்சுமி (38) என்ற ஆசிரியை நடத்தி கொண்டிருந்தார்.மாணவர்கள், கம்ப்யூட்டர் வகுப்பு முடிந்து அறையை விட்டு வெளியே செல்லும்போது, ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவன், மெயின் சுவிட்சை ஆப் செய்துவிட்டான்.
 
          இதனால் அங்கிருந்த 20க்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் அணைந்து விட்டன.  இதில் 2 கம்ப்யூட்டரில் பழுது ஏற்பட்டது. இது தொடர்பாக மாணவன் ராஜாவை லட்சுமி கண்டித்துள்ளார்.வகுப்பில் சக மாணவர்கள் முன்னிலையில் தன்னை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மாணவன் ராஜா, ஆசிரியை லட்சுமியை கன்னத்தில் அறைந்துள்ளான். இதில் காயமடைந்த அவர் அலறி, மயங்கி கீழே விழுந்தார். இதனால் பயந்துபோன மாணவன் அங்கிருந்து தப்பியோடினான். ஆசிரியையின் காது ஜவ்வு கிழிந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

               இந்நிலையில், பள்ளி நிர்வாகம் சார்பில், மாணவன் ராஜா மீது நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை கமிட்டிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட மாணவன், கமிட்டியில் நேரில் சென்று விளக்கம் அளிக்கவில்லை. மேலும், அவனது பெற்றோர், ஆசிரியர்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளனர். இதனால், மாணவனை பள்ளியில் இருந்து நீக்க ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி உத்தரவிட்டது.இதையடுத்து மாணவனின் மாற்று சான்றிதழ் தபால் மூலம் நேற்று அவனது வீட்டுக்கு அனுப்பப்பட்டது.
 

ஆசிரியரை தாக்கிய வழக்கில் 36 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

                  பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் மாணவனின் தந்தை அருளானந்தம் உள்ளிட்ட 36 பேரின் ஜாமீன் மனுக்களையும் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.கோடம்பாக்கம் லயோலா தனியார் பள்ளியில் கடந்த நவம்பர் 20ம் தேதி உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர் (39), விசில் அடித்ததை கேலி செய்த மாணவன் அர்னால்டை கன்னத்தில் அடித்துள்ளார்.  
           இதுபற்றி அறிந்த மாணவனின் தந்தை அருளானந்தம், தனது ஆட்களுடன் பள்ளிக்கு வந்து ஆசிரியர் பாஸ்கரை தாக்கினார். இதுதொடர்பாக, விசாரணை நடத்திய கோடம்பாக்கம் போலீசார் 35 பேரை கைது செய்து அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், கொலை முயற்சி செய் தல், கொலை மிரட்டல் விடுத்தல், காயம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், தலைமறைவான அருளானந்தமும் கைது செய்யப்பட்டார். 

               இந்நிலையில், இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி அருளானந்தம், குமார், மகேஷ், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 36 பேர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந¢தது. அரசு வக்கீல் சண்முகவேலாயுதம், மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் ஆகியோர் ஆஜராகி, படுகாயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை தங்களின் செல்வாக்கால் கலைத்துவிடுவார்கள். எனவே, ஜாமீன் வழங்கக்கூடாது என்றனர். இதையடுத்து, 36 பேரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive