Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வி ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

            ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிட மாணவர்கள் ஆகியோர் கல்வி ஊக்கத் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்தார்.

 இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு அரசு ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.

அரசு விடுதிகள் அல்லாமல், கல்லூரி விடுதிகளில் தங்கி பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7,500-ம், முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8000-ம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இதனைப் பெற, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். எனவே, தகுதியுள்ள சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தோர் இந்த ஊக்கத் தொகையைப் பெற, தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் மூலம் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive