Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PGTRB- விண்ணப்பம் விற்பனை தொடங்கியது: 2¾ லட்சம் விற்கும் என்று எதிர்பார்ப்பு


         முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 1,807 பேர் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். தேர்வுக்கான விண்ணப்பம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும்.

          சென்னையில் நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. முதுகலை பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் வந்து விண்ணப்ப படிவத்தை வரிசையில் நின்று பெற்றுச்சென்றனர். இந்தபடிவம் 26-ந்தேதி வரை வழங்கப்படுகிறது. அன்றுதான் பூர்த்தி செய்த படிவத்தை சமர்ப்பிக்கவும் கடைசி நாள்.

         இந்த படிவம் 2 லட்சத்து 75 ஆயிரம் வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு வருகிற ஜனவரி மாதம் 10-ந்தேதி நடைபெறுகிறது.

 (மிக முக்கிய குறிப்பு - கடந்த கால தேர்வுகளில் தொடர்பு முகவரியாக தங்கள் சொந்த மாவட்டத்தை வழங்கியவர்கள் மட்டுமே, தாங்கள் தேர்வு எழுதி தேர்வு பட்டியலில் இடம்பெற்றால், தங்கள் சொந்த மாவட்டத்தில் முதல் நாள் காலை நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள். எனவே அதனை நினைவுகூர்ந்து தங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பத்தை நிரப்புமாறு பாடசாலை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்).




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive