Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் பணப்பலன்களை உடனடியாக வழங்க கோரிக்கை

           ஆசிரியர்கள் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் வட்டார பொதுக்குழு கூட்டம் வேடசந்தூரில் நடந்தது. வட்டாரத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். 

              செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் மலர்விழி முன்னிலை வகித்தனர். மாநில பொதுசெயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பேசினார். மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் ஜோசப் சேவியர், பொரு ளாளர் பாண்டியராஜன், மாநில துணைத்தலைவர் பாபு கலந்து கொண்டனர். வேடசந்தூர் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவியல் பாடம் பயின்ற பட்டதாரிகளை அறிவியல் உதவி தொடக்க கல்வி அலுவலர்களாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேடசந்தூர் வட்டார தலைவராக முருகேசன், செயலாளராக கோதண்டராமன், துணைத்தலைவராக அமலன், இணை செயலாளராக நீலவேணி, செயற்குழு உறுப்பினர்களாக குமாரவேல், மோகன், கோமதி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive