Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி மாணவன் இறப்பு எதிரொலி: ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மறியல்

          பள்ளி மாணவன் இறந்த வழக்கில் வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இறந்த மாணவரின் உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டதால் நிலக்கோட்டையில் பதட்டம் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 11 ம் வகுப்பு மாணவர் சக மாணவர் அடித்ததால் இறந்தார்.  
 
           விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட மாணவரை கைது செய்தனர். கொலை சம்பவத்தையடுத்து பள்ளிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இறந்த வினோத்தின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் நிலக்கோட்டை நால்ரோட்டில் நேற்று காலை ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறந்த மாணவனின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர், வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். டி.எஸ்.பி., கருப்பசாமி, தாசில்தார் மோகன், இன்ஸ்பெக்டர் சுரேஷ், எத்திலோடு ஊராட்சி மன்ற தலைவர் வீரமணிராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தாலுகா அலுவலகம் சென்று கோரிக்கையை மனுவாக எழுதி தாசில்தாரிடம் கொடுத்து கலைந்து சென்றனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் நிலக்கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive