Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திருவள்ளுவர் பல்கலை: 41 ஆயிரம் மாணவர்களுக்கு டிசம்பருக்குள் சான்றிதழ் !

          திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை தேர்வு எழுதிய மாணவர்களில் இதுவரை சான்றிதழ் பெறாத 41 ஆயிரம் பேருக்கு டிசம்பர் மாதத்துக்குள் சான்றிதழ் வழங்கப்படும் என திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
           கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற்ற 10-ஆவது கல்விக்குழுக் கூட்டம் தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இக்கூட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் பட்டியல், புரொவிஷனல் சான்றிதழ் உள்ளிட்ட 3 லட்சத்து 18 ஆயிரம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும், எஞ்சியுள்ள 41 ஆயிரம் பேருக்கு வரும் டிசம்பர் மாதத்துக்குள் வழங்கவும், வரும் 2013ஆம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் ஜனவரி மாதத்துக்குள் சான்றிதழ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி பல்கலைக்கழக தேர்வுத் துறை முழுமையாக கணினிமயமாக்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive