Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்வை நடத்துவது யார்? ஆந்திரா - தெலுங்கானா மோதல்

            ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், ஆந்திரா - தெலுங்கானா என, இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் முதல், தெலுங்கானா மாநிலம் உதயமாகியுள்ளது.

             நீர், மின்சாரம், வருவாய் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்வதில் இரு மாநில அரசுகளுக்கும் இடையே தொடர்ந்து தகராறு இருந்து வருகிறது. தற்போது, பள்ளி தேர்வு விவகாரத்திலும், இரு மாநில அரசுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், 'இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு தனியாக நடத்தப்படும்' என, தெரிவித்திருந்தார். இதற்கு, ஆந்திர மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

          அம்மாநில மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்ரீனிவாச ராவ் கூறியதாவது: ஆந்திராவில், 11 லட்சம் மாணவர்களும், தெலுங்கானாவில், ஒன்பது லட்சம் மாணவர்களும் இந்தாண்டு, பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர். இவர்களுக்கான கடந்தாண்டு பிளஸ் 1 தேர்வு, பொதுத் தேர்வாகவே நடந்தது. இந்நிலையில், தெலுங்கானா மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வை தனியாக நடத்தப் போவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்வியில் சேருவதற்கு பொதுத் தேர்வு அவசியம். இல்லையெனில், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது, ஆந்திரா மறுசீரமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டவிதிகளை தெலுங்கானா மாநில அரசு பின்பற்றுவது இல்லை. இதுகுறித்து கவர்னரிடம் புகார் அளிக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive