Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப் 2 தேர்வு குளறுபடி அதிகாரிகள் நிர்ப்பந்தத்தால் தேர்வு எழுதினோம்: மறுதேர்வு எழுதிய 48 பேர் குற்றச்சாட்டு

            கம்ப்யூட்டர் சர்வர் குளறு படியால் குரூப் 2 தேர்வு எழுத முடியாமல் தவித்த தேர்வர்கள் 48 பேர், நேற்று சட்டமங்கலம் கல்லூரியில் மறு தேர்வு எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு டிசம்பர் 1ம்தேதி குரூப் 2ல் அடங்கிய பதவிக்கான (நேர்காணல் பதவி) எழுத்து தேர்வு நடத்தியது. 
 
        6 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 11,497 பேர் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 300 பேருக்கு மறைமலைநகர் அடுத்த சட்டமங்கலம் ஏ.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு முன்பாகவே 270 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். ஒரு அறையில் 56 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அப்போது, கம்ப்யூட் டர் சர்வர் குளறுபடியால் கேள்வித்தாள் வரவில்லை. இதனால் தேர்வு எழுத முடியாமல் அவதிப்பட்டனர். இதே கல்லூரியில் மறு தேர்வு நடத்தப்படும் என பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். 

               அதன்படி சட்டமங்கலத்தில் உள்ள பி.ஏ. பொறியியல் கல்லூரியில் 48 பேருக்கு நேற்று காலை மறு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுத வந்தவர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் அனைவரும் உத்வேகமாக தேர்வு எழுத வந்தோம். ஆனால் இந்த பிரச்னையால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. தேர்வு நன்றாக எழுத முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது. அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தின்படி தேர்வு எழுதியுள்ளோம்’’ என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive