Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

          ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
             ஜாமினில் விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

          ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்க கடந்த 7ம் தேதி, கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்ததைஅடுத்து, கடந்த 9ம் தேதி அவரது சார்பில் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், உடல்நிலை மற்றும் வயதுஅடிப்படையில் ஜாமின் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில், சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கிற்கு, எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை என்றும், தற்போது அந்தப் பதவியில்இல்லாததால், வழக்கிற்கு தம்மால் எவ்வித தடையும் ஏற்படாது எனவும் ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பிலும் ஜாமின் கேட்டு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive