Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்லூரி மாணவர்களை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

           கல்லூரி மாணவர்களை தூண்டி போராட்டம் நடத்தும் அரசியல் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொங்கு ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

           கொ.ஜ.க., தலைவர் நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: பல தனியார் கல்வி நிறுவனங்கள் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு, உரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளோடு செயல்பட்டு வருகின்றன. மேலும், ஆண்டுக்கு ஒருமுறை அண்ணா பல்கலையால் மறுஆய்வு செய்யப்பட்டு தகுதிச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

          தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள் முதலாமாண்டிற்கு அரசு ஒதுக்கீட்டின்கீழ் 40 ஆயிரம் ரூபாயும், கல்லூரி நிர்வாகத்தில் வந்ததால் 70 ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டுமென, தமிழக அரசு கட்டணம் நிர்ணயத்துள்ளது. பட்டியல் இனத்தவருக்கு அரசு தரப்பிலிருந்து கட்டணம் செலுத்தப்படுகிறது.

பல தனியார்கல்வி நிறுவனங்களில், முதலமாண்டு மாணவர்களைத் தயார்படுத்த இணைப்புப் பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல்கட்சி சார்ந்த சில அமைப்புகள் மாணவர்களை கல்லூரிகளுக்கு எதிராக தூண்டிவிட்டு அவர்களின் படிப்பை தடைசெய்வதுடன் அவர்களின் எதிர்காலத்தையும் பாழாக்கி வருகின்றன. மாணவர்களை தூண்டிவிடும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive