Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"கலையில் ஆர்வமுள்ள மாணவர்களை, அவர்களது பெற்றோர்கள் ஊக்கப்படுத்துவது அவசியம்"

           விழுப்புரம் இ.எஸ்., மியூசிக் அகாடமி சார்பில் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் சலங்கை பூஜை விழா நடந்தது. நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் சாமிகண்ணு சிறப்புரையாற்றி பேசியதாவது: 
 
         பிள்ளைகளின் அறிவுத் திறனை பெற்றோர்கள் கண்டறிந்து, அதற்கு ஊக்கமுட்டும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது புரியாததால் பல மாணவர்களின் திறமை வீணாகி கொண்டிருக்கும் சூழல் எழுந்துள்ளது. எங்களின் தகுதிக்கு நாங்கள் கலைத் துறைக்கு எவ்வளவுதான் செலவு செய்தாலும், மாணவர்கள் சேர விரும்புவதில்லை.

        இப்படியே போனால், தமிழர்களின் கலாசாரமான கலைத் துறை சீரழிந்து போகும் நிலை உருவாகும். கலைத் துறையில் மாணவர்கள் ஆர்வம் பெற்றிருந்தாலும், பெற்றோர்கள் மத்தியில் போதிய ஆர்வமில்லை. கலையில் ஆர்வமுள்ள மாணவர்களை, அவர்களது பெற்றோர்கள் ஊக்கப்படுத்துவது அவசியம். இதன்மூலம் கல்வி துறை மட்டுமின்றி கலை துறையும் வளர்ச்சியடையும். இவ்வாறு சாமிகண்ணு கூறினார்.

தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மாணவிகளுக்கு பாரதியார் பல்கலை கூடம் நடனத்துறை விரிவுரையாளர் சண்முகசுந்தரி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில், கல்லூரி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், துறை தலைவர்கள், பேராசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive