Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தடையானைக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

      மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை நீதிமன்றத்தில் தடையானைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது




13 Comments:

  1. ஒரு மகனின் கண்ணீர் கதறல்

    எனக்கு வேலை வேண்டும் என்று கேட்கவில்லை இந்த weightage முறையால் இனி ஆசிரியர் வேலையே கிடைக்காது என்று தான் பயப்படுகிறேன்

    அடிப்படை கல்வி யால் ஒருவரின் வேலை பறிபோகிறது என்றால் ?

    இந்த ? போல் என் வாழ்கையும் ?

    மலை நீர் இல்லை

    இதோ எங்களின் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
    நன்றாக நனையுங்கள்

    வேலையை விட்டு விட்டு TET தேவிற்கு நன்றாக படித்தேன்

    நானும் 97 மதிப்பெண் எடுத்து தவிக்கிறேன் வேலை கிடைக்கவில்லை

    10ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவன்

    +2 படிக்கும் பொழுது ஒரு விபத்து ஏற்ப்பட்டது
    எப்படியோ கஷ்டப்பட்டு பாஸ் செய்தேன்

    இன்று எனக்கு வேலை இல்லையாம் காரணம் +2 மதிப்பெண் குறைவு

    இன்று நான் நடை பிணம் போல்

    33 வயது
    வேலை இல்லை
    திருமணம் இல்லை (பாதியில் நின்று விட்டது காரணம் வேலை இல்லை )

    ஆம் இன்றும் எனக்காக கஷ்டபடுகிறாள் என் தாய்

    தள்ளாடும் வயதிலும் ஆடுகளை ஓட்டி செல்கிறாள் தாங்கமுடியவில்லை

    கண்களில் கண்ணீர் மட்டும்
    கண்களில் கண்ணீர் மட்டும்
    கண்களில் கண்ணீர் மட்டும்

    என்று தணியும் எங்கள் கஷ்டங்கள் இறைவா

    நீதி இல்லாத இவுலகில் நிமதி இல்லாமல் நான் மட்டுமா இல்லை இல்லை
    என்னை போன்று எத்தனை பேரோ

    ReplyDelete
  2. ------------------------------
    மாபெரும் கல்வி உரிமை மாநாடு
    ------------------------------

    14/9/2014. ஞாயிற்றுகிழமை அன்று மாபெரும் கல்வி உரிமை போராட்டம். பாதிக்கப்பட்ட 65,000 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் குடும்பங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

    ஆதரவு தாருங்கள் நண்பர்களே எனக்கு அல்ல!! உங்கள் உரிமைக்கு!! உங்கள் வேலைக்கு!!

    மேலும் விபரங்களுக்கு:
    Rajalingam Puliangudi......9543079848
    Selladurai........9843633012
    Kabilan............9092019692
    Nallenthiran....9003540800
    Manimaran......9894174462
    Raja..................9442799974
    Dinesh..............7305383952

    Pls visit.
    http://www.tnteachersnews.blogspot.in

    ReplyDelete
  3. ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்..

    திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு......
    என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில் ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

    கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார் ...

    நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

    கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

    அந்த நாய் தெருவை கடந்து புறவழிச்சாலைக்கு வந்தது.. அப்போது சிவப்பு விளக்கு (Signal) எரிந்தது..

    அந்த நாய் சாலைய கடக்காமல் நின்றது...
    பச்சை விளக்கு விழுந்தவுடன் சாலையை கடந்தது...

    கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார்...

    அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..
    ஒரு குறிப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

    கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு பயணச்சீட்டைக் கொடுத்தார்..

    இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

    கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...
    நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின்
    முன் நின்று கதவை தட்டியது...

    கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...
    நாயின் கழுத்தில் உள்ள
    பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....

    கடைக்காரர் ஓடி சென்று:

    நிறுத்துங்க??
    ஏன் அடிக்கறீங்க??
    அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???

    அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க..

    நாய்க்கு கொஞ்சம் கூட
    பொறுப்பே இல்லன்னு சொன்னாராம் ....

    நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க இப்படி தான்..

    நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் சில நேரத்தில் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது...

    பிடித்திருந்தால் பகிரவும்

    ReplyDelete
  4. What about case atleast today there will be a solution or not

    ReplyDelete
  5. Please madurai selected contat me very urgent pls 8438426043

    ReplyDelete
  6. போராட்டக்காரர்களுக்கு ஒரு வேண்டுகோள்
    பட்டியலில் இடம் பெற்று பணிநியமனத்திற்கு காத்திருக்கும் யாறும் உங்களுக்கு வேலை கிடைக்கக்கூடாது என்று எந்த கடவுளிடமும் வேண்டமாட்டார்கள்.

    அதற்க்கான அவசியமும் இல்லை. 12347 பேருடன் உங்களுக்கும் பணிநியமனம் கிடைத்தால் அப்போது அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். அதை விடுத்து நமக்கு கிடைக்கவில்லை, இவர்களுக்கு எப்படி கிடைக்கலாம் என்று நீங்கள் தவறான ஆட்களை சந்தித்து தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்பதை தயவுசெய்து உணருங்கள். பணிநியமனம் பெற இருக்கும் அனைவரும் அனைத்து தகுதியும் உடையவர்களே.

    நீங்களும் தான், போராட்டம் என்ற முறையை மாற்றி வேண்டுகோளாக வைத்துப்பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பலன் கிடைக்கும்.
    வாழ்க்கை என்பது நிகழ்ச்சி நிரல்படி பட்டியலிட்ட சம்பவங்களின் ஊர்வலம் இல்லை. அது எதிர்பாராமல் வருகிற வாய்ப்புகளின் ஊர்வலம். ஒவ்வொரு பிரச்னையும் நமக்கு கிடைக்கிற வாய்ப்புதான்.

    தவறான வழிகாட்டுதலின் படி நீங்கள் போய்கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அது எதிர்வினையையே தரும். எங்களை பாதிக்காமல் உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம். அதேபோல் நீங்களும் செய்து பாருங்கள் கண்டிப்பாக பலன் இருக்கும்.

    எனக்கு கிடைக்கவில்லை, அவர்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கலாம், என்னால் அதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை என்ற மன நிலையை மாற்றி யோசியுங்கள் நல்லதே நடக்கும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive