ஆதிதிராவிட, பழங்குடி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சரின் தகுதி பரிசு தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் ஆதிதிராவிடர்,
பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவிகளில் அதிக
மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு மாணவர்களில் 1000 பேருக்கும், மாணவிகளில்
1000 பேருக்கும் முதலமைச்சரின் தகுதி பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2011 & 2012ம் கல்வியாண்டு முதல் முதலமைச்சரின் கல்வி பரிசு தொகை
தற்போது ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்படி திட்டத்தின் கீழ் பயனடைய 2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள
அரசு பொதுத்தேர்வில் 12ம் வகுப்பில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்
மாணவர்களுக்கு 1200க்கு 1087, மாணவிகளுக்கு 1200க்கு 1101 ஆகும். இதில்
தமிழை ஒரு பாடமாக கொண்டு பயின்றிருக்க வேண்டும்.
எனவே, மேற்படி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் பயனடையும் விதமாக
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று
கல்லூரியில் மேற்படிப்புக்கு சேர்ந்துள்ள தகுதியான மாணவ, மாணவிகளுக்கு
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத் தலைவர்கள் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும்
பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்து விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மேற்படி அலுவலகத்தில் வருகின்ற 30ம் தேதிக்குள்
சமர்பித்து பரிசு தொகையினை மாணவ, மாணவிகள் பெற்று பயனடையலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...