Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET Pape 1 & Paper 2 இறுதி பட்டியல் ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு

          இடைநிலை ஆசிரியர் தேர்வு: 31,000 பேர் மதிப்பெண் வெளியீடு - தினமலர்

"இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல், ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எப்படியும், இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்."
         இடைநிலை ஆசிரியர் முதல்தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31 ஆயிரம் பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று மாலை, இணையதளத்தில் வெளியிட்டது.
         தயார் நிலையில்...: டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், ஏற்கனவே வெளியிடப்பட்டு, அது தொடர்பாக, தேர்வர்கள் தரப்பில் இருந்து, குறைகளை பெற்று, நிவர்த்தி செய்யும் பணிகளும் முடிந்து விட்டன. தற்போது, இறுதி தேர்வு பட்டியல் வெளியிட தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்) தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31,079 பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் (இறுதி மதிப்பெண்) விவரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நேற்று மாலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டது. தேர்வர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில், 100 மதிப்பெண்ணுக்கு, தங்களுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதில், குறை ஏதேனும் இருந்தால், வரும், 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கும், குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்று, உரிய ஆதாரங்களை காட்டி, நிவாரணம் பெறலாம்.

சான்றிதழ் சரிபார்ப்பு : இதுவரை நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்களுக்கும், இறுதியாக, ஒரு வாய்ப்பை, டி.ஆர்.பி., வழங்கி உள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாமும், வரும், 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கிறது. குறை தீர்ப்பு முகாம் நடக்கும் மையங்களின் முகவரி விவரம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம்கள் நடக்கும் மையங்களின் விவரம் ஆகியவையும், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் நடந்தபின், தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.

தேர்வு பட்டியல் ஒன்றாக வெளியாகுமா? : பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வுப் பட்டியல் தயாராகி, 5 நாள் முடிந்த நிலையிலும், பட்டியல் வெளியாகவில்லை. இந்நிலையில், இடைநிலை ஆசிரியர் பணிக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், நேற்று வெளியிடப்பட்டுஉள்ளது. இதற்கான முகாம்களும் அறிவிக்கப் பட்டுள்ளன. எனவே, இடைநிலை ஆசிரியர் தேர்வின், இறுதிக்கட்ட பணிகளும் முடிந்தபின், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல், ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எப்படியும், இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்.




26 Comments:

  1. இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் தபாலின் மூலம் படிப்பவர்கள் பட்டியலை எடுத்தால் அவர்கள் 60% மதிப்பெண் பெறுவதே கடினம் இவர்களை கல்லூரியில் படித்தவர்களின் மதிப்பெண்னோடு ஒப்பிட்டு weightage வழங்குவது எப்படி இதில் கொடுமை என்னவென்றால் இவர்களில் சிலர் tetல் 90 மதிப்பெண்னுக்கு மேல் பெற்றுள்ளனர் இதற்கு சரியான தீர்வு என்ன தெரியப்படுத்துங்கள்

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

  3. தகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,

    அல்லது தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்

    ReplyDelete
    Replies
    1. ovvorutharum ovvoru korikaiya sonna kulapam than minjum, ithukellam orae vali retired judge thalaimayil oru comitee potu arayinthu next tet nadathanum...

      Delete
    2. Yes. Very Correct

      Thank you

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. இதற்கு இன்னொறு ug trb வைத்துவிடலாம்

      Delete
  4. பொறுப்புள்ள பத்திரிக்கைகள் செய்திகளை அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும். அது யார் வட்டாரங்கள்? கடந்த ஓர் ஆண்டு காலமாக பெரும்பாலும் வத்ந்திகலையே பரப்பி வருகிறார்கள்.ஒரு அரசு நிறுவனத்தில் செய்தி தொடர்புக்கு ஒரு அதிகாரி இருக்க வேண்டும்; ஊடகங்களுக்கு அவர் மூலம் சரியான தவகல்களை அளிக்க வேண்டும். மன உளைச்சலில் உள்ள தேர்வர்களை வதந்திகள் மூலம் பலர் குழப்பி வேதனைப்படுத்துவது போதாது என்று பெரிய பத்திரிகைகளும் சேர்ந்து நோகடிக்கிறார்கள்...

    ReplyDelete
  5. தகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,

    அல்லது தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Seniors prachanaiya purinchukkuga munish...nanga thirumbavum +2,b.ed,b.sc improvement elutha mudiyuma.? Ippo seniors vaethanaiyya purinchukka mudiyalanalum oru naal purium ...yena innum unga valgai mudiyala.....

      Delete
    3. Indraya 5% relaxation case_case file panniya candidate ku oru posting. Reserve panna sollli court judgement.....source-mr.vijayakumar chennai comment

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடிகளை நீக்க வேண்டும்: 'தி இந்து' உங்கள் குரல் மூலம் ஒரு கோரிக்கை


    ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்களை முன்வைத்து நேர்காணல் நடைபெற்றுள்ளதால், அதற்குள் சீனியாரிட்டியையும், முன் அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் பலர். தவிர மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக தேர்வு நடத்தியதிலும் உள்ள குளறுபடிகளை நீக்கி சரியான முறையில் உரியவர்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

    இது பற்றி உங்கள் குரல் பகுதிக்கு பல அழைப்புகள் வந்துள்ளன. அதில் சம்பந்தப்பட்டவர்கள் சிலரிடம் பேசியதில் அவர்கள் கூறியதாவது:

    கண்ணம்மா, பாலகிருஷ்ணன் உடுமலை:

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வின் மூலம் தேறியவர்களுக்கு தொடர்ந்து நேர்காணல் அழைப்பும் வந்தது. அதில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கென குறிப்பிட்ட மதிப்பெண் அளித்தனர் தேர்வாளர்கள். இதை கவனித்து எங்களைப் போன்ற சீனியர்கள் அதிர்ச்சியடைந்தோம்.

    டிஇடி தேர்வு என்பதில், வெறுமனே பெறும் மதிப்பெண்ணை கணக்கிட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைத்து அதற்கு தனி மதிப்பெண்ணை அளிப்பதாக இருந்தால் பரவாயில்லை. அதை விட்டுவிட்டு இப்படி கணக்கிடுவது எந்த வகையில் நியாயம்? பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ளது போன்ற கல்வியும் இல்லை. மதிப்பெண் போடுவதும் இல்லை.

    உதாரணமாக நான் (கண்ணம்மா) 90-92 ஆம் ஆண்டுகளில் பிஎட் படிக்கும் காலத்திலும், அதற்கு முன்பு பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போதும் ஒரு பாடத்தில் 80 மதிப்பெண் ஆசிரியர்கள் போடுவது என்பது குதிரைக் கொம்பு. அதே மதிப்பெண்ணை இப்போதுள்ள சுமாராக படிக்கக்கூடிய மாணவர்களே வாங்குவதும், நூற்றுக்கு நூறு, தொண்ணூறு மதிப்பெண்கள் ஏராளமான மாணவர்கள் பெறுவதும் சாதாரணமாக உள்ளது. அந்த வகையில் பள்ளி மதிப்பெண்ணை கணக்கிட்டால் எங்களை போன்ற சீனியர் ஆசிரியர்கள் யாருக்குமே பணி வாய்ப்பு கிடைக்காது.

    வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாங்கள் பதிவு செய்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில் நான்கு, ஐந்து தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக மாறி மாறி பணிபுரிந்து வெறும் ஆயிரம், ஐயாயிரம் சம்பளத்துக்கு கஷ்டப்பட்டுள்ளோம். அந்த அனுபவத்தையெல்லாம் கணக்கில் கொள்வதில்லை. சீனியர்களுக்கு 50 சதவீதம் என்று ஒதுக்கீடு செய்யலாம் அல்லவா? மேல்மட்டத்தில் பரீசிலனை செய்து முடிவு எடுக்கும் அளவுக்கு உங்கள் குரல் மூலம் தீர்வு வேண்டும் என்றனர்.

    பெயர் வெளியிடவிரும்பாத மாற்றுத்திறனாளி ஆசிரியை ஒருவர் கூறியது:

    கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றுத் திறனாளிகளுக்காக டிஇடி சிறப்பு தகுதித் தேர்வு வச்சாங்க. அதில் தமிழ்நாடு முழுக்க 4500 பேர் எழுதியிருக்காங்க. ஒரு மாசம் கழிச்சு ரிசல்ட் வந்தது. சுமார் 900 பேர் தேர்ச்சி பெற்றிருந்தாங்க. தேர்வு எழுதுவதற்கு முன்பு 82 சதவீத மதிப்பெண் எடுத்தாலே அவர்களுக்கு வேலை என்று சொன்னார்கள். ஆனால் கடந்த ஜீலை 1,2 தேதிகளில் தமிழகத்தில் விழுப்புரம், சேலம், மதுரை உள்ளிட்ட நான்கு இடங்களில் எங்களுக்கு நேர்காணல் வைத்தார்கள். அதில் 10 வது, 12 வது படித்தபோது எடுத்த மதிப்பெண்களை வைத்து ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் போட்டுள்ளார்கள். இப்ப யாருக்கு வேலை என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது.

    போன வருஷம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தபோது அதில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டார்கள். அதில் மாற்றுத்திறானளிகள் உள்பட 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கே இதுவரை பணியிடம் நிரப்பவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடம் ஒதுக்கீடு என்கிறார்கள். தற்போது 10 ஆயிரம் பணியிடம் நிரப்பப் போவதாக தகவல்கள் உள்ளது. அப்படி பார்த்தால் மாற்றுத்திறனாளிகள் 3 சதவீதத்திற்கு 300 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். அந்த வாய்ப்பு இந்த முறை அல்லாமல் சென்ற முறை எழுதிய மாற்றுத்திறனாளிகளுக்குத்தான் முதல் இடமா? சீனியாரிட்டிபடி வருமா? ஒன்றுமே புரியவில்லை. கல்வித்துறை இதை தெளிவு படுத்தி அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. 15.....20.....varudam kaathirunthu paar engal vali puriyum.

      Delete
    3. Only solution is taking only the TET marks and giving posting. 18 varusam experience iruntha... tetla unga experience ah vechu first mark vangirukalam.... 12th degree la than freshers marks niraya score pani irupanganuringa. So TET marks a Mattum consider pani posting podatum

      Delete
  8. ehana masam ipdiyae poitae iruke ithuku oru mudivae illiya let c 1 yr celebration pana vendidyathu than tet candidate chemistry

    ReplyDelete
  9. epo tha ya posting poduvinga anniyan ambi kita soli ellarukum thandanai vangi tara solanum tet postion delay anathuku thandanai kumbipatham,kambikuma,kabimkubim
    ayo polamba vachutangalae

    ReplyDelete
  10. TET தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் சரியான வினாக்கள், சரியான பதில் எது? போன்றவை குறித்த வழக்குகளே அதிகம் , இவை அனைத்திற்கும் ஒருவழியாக தீர்ப்பு வந்துவிட்டது நிம்மதி தரும் செய்தி. பிற வழக்குகள் நிலுவையில் உள்ளது . இவ்வழக்குகளும் விசாரித்த பின்னரே அரசால் சட்டப்படி பணியமர்த்த முடியும். இது பற்றி நன்கு அறிந்தவர்கள் தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளவும்.

    ReplyDelete
  11. TRB will not publish both the selection lists at a time. There are many practical difficulties. So paper 2 selection list will be published with in 1 or 2 days. paper 1 will be published after 10 days

    ReplyDelete
  12. என்னுடைய PG TRB (PHYSICS) Mark 93,இப்போ reresult வந்தாச்சு, அதுபடி பார்த்தால் எனக்கு 1 mark add ஆகணும், ஆனால், இப்பவும் 93ன்னு தான் வருது. மறுபடியும் answer key check பண்ணியாச்சு. select ஆகுரோம் ஆகல இது இரண்டாவது விசயம், exam எழுதின அனைவருக்கும் mark correct-ட போடணும்ல, ஏன் TRB போடல? எல்லாரும்தான் பணம் கட்டி exam
    எழுதுறோம். ஏன் இந்த பாரபட்சம்? TRB எதையுமே சரியா பண்ணல, தேர்வு எழுதினவங்கல நோகடிச்சதத்தவிர..................

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive