Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Article: மூத்த ஆசிரியர்கள் பலி ஆடுகளா?

TET Article: மூத்த ஆசிரியர்களை பலிகடா ஆக்கும் அரசாணை எண் : 71

          
           தற்பொழுது நடந்த ஆசிரியர் தகுதிதேர்வில் பட்டதாரி ஆசிரியர்களை தேர்தெடுக்கும் முறையினை அரசானை எண் 71 ல் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த அரசாணைபடி தகுதிதேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், HSC க்கு 10 மதிப்பெண்ணும், DEGREE க்கு 15 மதிப்பெண்ணும், B.ED க்கு 15 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. இந்த அரசாணை முறையை பின்பற்றும் போது மூத்த, பணி அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இப்பவும் இனி வரும் காலங்களில் எப்பொழுதும் வேலைக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் பிரச்சனை:

1)    ஆசிரியர் தகுதிதேர்வில் எடுத்த மதிப்பெண்ணிற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுப்பது என்பது சரியான முறை. ஏனெனில் இந்த தேர்வு அனைவராலும் ஒரே நேரத்தில்., ஒரே மாதிரியான வினாத்தாள்களை கொண்டு எழுதப்பட்ட பொதுவான தேர்வு ஆகும்.

2)   +2 க்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுப்பது என்பது மிகவும் தவறான முறை. ஏனெனில் +2 படிப்பை ஒவ்வொருவரும் பல்வேறு காலகட்டங்களிலும், பல விதமான பாடப்பிரிவுகளிலும், பல விதமான பள்ளிகளிலும் பயில்கின்றனர். இங்கு தொழிற்கல்வி பாடபிரிவில் செய்முறைக்கு 450 மதிப்பெண் வழங்கப்படுகிறது. மேலும் பள்ளிகளில்  MATRIC பள்ளி, CBSE பள்ளி, INTERNATIONAL பள்ளி என்று பல்வேறு விதமான பள்ளிகளில் பயில்கின்றனர். மேலும் பள்ளிகளில் அரசு பள்ளி, தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் என்று பல விதமான பள்ளிகளில் பயில்கின்றனர். இதில் எங்கு படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வளவு முரண்பாடுகளை கொண்ட படிப்பை அனைவரும் சமம் என்று கூறுவது மிகவும் தவறானது.

3)  மேலும் பட்ட படிப்பு  மற்றும் பட்டய படிப்பிலும் பல்வேறு விதமான முரண்பாடுகள் உள்ளது. இதிலும் படித்த காலங்கள், படித்த கல்லூரிகள், படித்த பாடம் மற்றும் தேர்வு முறை முற்றிலும் வேறுபடுகிறது. கல்லூரிகள் என்று பார்த்தால் தனியார் கல்லூரி, அரசு கல்லூரி, தன்னாட்சி கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்கலை என்று பல உண்டு. 15 வருடங்களுக்கு முன்பு இன்டர்னல் மதிப்பெண் என்பதே கிடையாது. ஆனால் இன்று 25 மதிப்பெண் இன்டர்னல் வழங்கப்படுகிறது. இந்த மதிப்பெண்ணே மூன்று வருடத்திற்கு 750 க்கு மேல் கிடைக்கிறது. இன்றைய சூல்நிலையில் நிறைய வசதிகளுடன் கூடிய தனியார் கல்லூரிகள் அதிகம். படிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

4)  இந்த முறை வேலை கிடைக்கவில்லை என்றால் அடுத்தமுறை தகுதிதேர்வு எழுதி அதன் மதிப்பெண்ணை அதிகப்படுத்த முடியும். ஆனால் எனது +2, UG, B.ED மதிப்பெண் என்பது நிரந்தரமானது. அதை எப்படி என்னால் அதிகப்படுத்த முடியும். எப்படி பார்த்தாலும் எனது பணி வாய்ப்பு என்பதே எதிர்காலத்தில் இல்லை என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

5)  மேலும் +2, UG, B.ED என்பது தகுதித்தேர்வு எழுத தேவையான அடிப்படை தகுதிகளே.  அடிப்படை தகுதி படிப்புகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது என்பது தவறான முறையாகும்

6)  பணி அனுபவம் மற்றும் சீனியாரிட்டிக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்காதது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது.  ஏன் பணி அனுபவம் வாய்ந்த தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் சிறந்தவர்கள் கிடையாதா? எந்த தனியார் பள்ளிக்கு வேலைக்கு சென்றாலும் பணி அனுபவம் உண்டா என்று தான் முதலில் கேட்கிறார்கள். ஒவ்வொருவரும் ஆசிரியர் படிப்பை முடித்தவுடன் எம்பிளாய்மென்ட்-ல் பதிவு செய்கிறார்கள். எதற்காக வயதுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதற்காக. ஆனால் இங்கு சீனியாரிட்டிக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்படவில்லை.

7)  தற்பொழுது கடைபிடிக்கப்படும் முறையில் வெறும் +2, UG, B.ED ல் பெறப்பட்ட மதிப்பெண்களை கொண்டு மட்டுமே ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையானது சரியானதல்ல. மதிப்பெண்ணை மட்டுமே அளவுகோலாக கொண்டால் இந்த ஆசிரியர் தேர்வு முறை சிறந்ததாக அமையாது.

8)  நமது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகள் பல விதமாக உள்ளதால் தான் பொதுவான தேர்வு முறையே வந்தது. அந்த பொதுவான தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்ணை வைத்து ஆசிரியர்களை தேர்வு செய்தால் மட்டுமே யாருக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்கும். மேலும் சீனியாரிட்டி மற்றும் பணி அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

9) அரசானை எண் 71 ன் படி ஆசிரியர்ககளை தேர்வு செய்தால் தனியார் பள்ளியில் பயின்று, தனியார் கல்லூரியில் பட்ட மற்றும் பட்டய படிப்பை முடித்தவர்கள் மட்டுமே வேலைக்கு செல்ல முடியும். எங்கு அதிக மதிப்பெண் பெறப்படுகிறது என்பது ஊர் அறிந்த உண்மை. ஏன் அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் பயின்ற ஏழை கிராமப்புற மாணவர்கள் யாரும் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என நினைக்ககூடாதா?  கல்லூரி படிப்புகளின் மதிப்பெண்கள் அரசு வேலைக்கு செல்லும் போது எடுத்துகொள்வது முன்னதாகவே தெரிந்து இருந்தால் நாங்களும் ஒவ்வொரு தேர்வின் முக்கியத்துவம் கருதி படித்து இருப்போம். கஷ்டப்பட்டு படித்து தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலைக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

10)  இன்று அனைத்தும் தனியார்மயம். எங்கும் எதிலும் கம்யூட்டர் மயம். பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டால் இருந்த இடத்தில் இருந்து கேட்டு தெரிந்துகொள்ள செல்போன் மற்றும் இன்டர்நெட் வசதி. SMART CLASS வசதி என்று கல்வித்துறை அசுர வளர்ச்சி கண்டுள்ளது. எனவே இவ்வளவு டெக்னாலஜி கொண்ட இந்த காலகட்டங்களையும் இதில் எந்த ஒரு டெக்னாலஜியும் இல்லாத எங்களுடைய காலக்கட்டங்களையும் ஒன்றுதான் என கூறுவது மிகவும் தவறு. தகுதி தேர்விலே குறைந்த மதிப்பெண் வாங்கிவிட்டு வேலை கேட்கவில்லை. அதிக மதிப்பெண் பெற்றும் வாய்ப்பு பறிக்கப்படுவாதால் தான் எங்கள் உரிமைகளை கேட்கிறோம்.

Article By: Raja bharathi




24 Comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. விஞ்ஞான முறைப்படி வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட வேண்டும் என்றார்கள். ஆனால் வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற கான்செப்டே விஞ்ஞான ரீதியாக தவறு.
      நேரடி நியமனம் என்பது ஒன்று முழுமையான போட்டித் தேர்வு . மற்றொன்று வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு. ஆனால் இதை விடுத்து மூன்றாவது ஒன்றை கண்டு பிடித்ததன் விளைவு தான் இந்த இடியாப்பச் சிக்கல்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Hello Munish raja, why the TRB to go for the new method of direct recruitment. Already we have two options.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

  3. "NO PRIORITY FOR >90 !!!

    "No one is affected by anybody"!!!

    Note: I am taking 3 persons as examples and noting down their marks. I prepare their rank list according to both TET mark and Weight age mark. Finally, I conclude who are the "JOB GETTER"

    Name : Ambiga
    Tet : 95 (37.99)
    B.ed. : 50 % (7.50)
    Deg. : 50 % (7.50)
    +12. : 50 % (5.00)
    ================
    Weight age = 57.99
    ================
    Name : Banupriya
    Tet : 90 (36.00)
    B.ed. : 80 % (12.00)
    Deg. : 80 % (12.00)
    +12. : 80 % (8.00)
    ================
    Weight age = 68.00
    ================
    Name : Chitra
    Tet : 85 (33.99)
    B.ed. : 90 % (13.50)
    Deg. : 90 % (13.50)
    +12. : 90 % (9.00)
    ================
    Weight age = 69.99
    ================

    Analysis :

    1). TET mark alone does not determine one's rank.
    2). One's rank is determined by all 4 factors (tet, b.ed, degree and +2).
    3). "No one is affected by anybody".
    4). So, relaxation can not be cancelled.
    5).So, priority can not be given for >90.


    RESULT REPORT !!!

    Rank list according to TET Mark !!!

    First Rank : Ambiga. (95)
    Second Rank : Banupriya. (90)
    Third Rank. : Chitra. (85)

    Rank List according to Weight age !!!

    First Rank : Chitra. (69.99)
    Second Rank : Banupriya. (68.00)
    Third Rank. : Ambiga. (57.99)

    ReplyDelete
    Replies
    1. English.mbc(female) evlo posting? Evlo paer pass? Cutoff?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. as per your calculation ambika never get teacher job at any time, ore velai irukkum pothu yarukku velai kudupeenga, chitraka is this correct one.

      Delete
    4. Chitra'ku taruvathil tavaru yenna ullathu...
      2000' il 1050 yedutavargalum undu 2014' I'll 500 edutavargalum undu.. varudam yenna irunthalum padital than mark kidaikum.. ipothu anaivarum athiga mark sulabaga yedutu vidukirargal yenral exam eluthiya anaivarum 1000'Ku mael yeduka mudiuma.. ipoluthum fail aagum manavargal ullanar ithai ungalal maruka mudiuma..

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. ipaadi paesura neengalam 2000 la 12th 2003 la degree mudichiruntha than therium intha murail ulla thavaru... yedhaium mulusa therinjukama comment pannatheenga... neenga solra ambika chithralam appa 90% marks nenaichu kooda paaka mudiyathu, sari idhellam ungaluku puriyatium yen intha trb la velai paakuravangalukum puriyala idhuthan yen kavalai....

      Delete
    8. You are absolutely correct

      Delete
  4. Thanks for Raja bharathi sir for telling my own opinion.

    ReplyDelete
  5. weitage system kandipaga thavarana oru anugumurai

    ReplyDelete
  6. Any sca tet passed candidates in chemistry please reply

    ReplyDelete
  7. TET புதிய நியமனத்திற்கு தடை வழங்குவது சார்பான BRT's வழக்கு ஒத்திவைப்பு
    ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு
    மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் போட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம்
    கேட்டதால், வழக்கு அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது வருத்தம்

    ReplyDelete
  8. TET புதிய நியமனத்திற்கு தடை வழங்குவது சார்பான BRT's வழக்கு ஒத்திவைப்பு
    ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு
    மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் போட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம்
    கேட்டதால், வழக்கு அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது வருத்தம்

    ReplyDelete
  9. Dear All,   
     
    There is currently an Ebola outbreak putting all of us at risk. Pls help educate all around u by sending this msg to all your contacts..
     
    What is EBOLA?
     
    It's a virus that attacks a person blood system:
     
    Ebola is what scientists call a hemorrhagic fever - it operates by making its victims bleed from almost anywhere on their body.
    Usually victims bleed to
    death.
     
    Ebola is highly contagious;
    Being transmitted via
    contact with body fluids
    such as blood, sweat, saliva,
    semen or other body discharges.
     
    Ebola is however NOT AN AIRBORNE VIRUS!
     
    EXTREMELY deadly:
    About 90% of people that
    catch Ebola will die from it.
    It's one of the deadliest
    diseases in the world,
    killing in just a few weeks.
     
    Untreatable(no cure):
    Ebola has no known treatment or cure.
    Victims are usually treated for symptoms with the faint hope that they recover.
     
    How Do I Know Someone has Ebola?
     
    •Fever
    •Headache
    •Diarrhoea
    •Vomiting
    •Weakness
    •Joint & Muscle pains
    •Stomach Pain
    •Lack of Appetite
     
    Protect Yourself:
    •Wash Your Hands
    with Soap
    Do this a lot. You can
    also use a good hand
    sanitizer. Avoid
    unnecessary physical contact with people.
     
    ■Restrict yourself to food you prepared yourself.
     
    ■Disinfect Your Surroundings
    The virus cannot
    survive disinfectants,heat, direct sunlight,detergents and soaps.
     
    Clean up!:
    •Fumigate If you have Pests.
    •Rodents can be carriers of Ebola.
    •Fumigate your environment & dispose off the carcasses properly!
    •Dead bodies CAN still
    transmit Ebola.
    •Don't touch them without
    protective gear or better yet avoid them altogether.
     
    Protect Yourself:
    •Use protective gear if you
    must care or go near
    someone you suspect has
    Ebola.
     
    Report:
    •Report any suspicious
    symptoms in yourself or
    anyone else IMMEDIATELY.
     
    Do not delay!
     
    Educate Everyone:
    •Tell your neighbours,
    colleagues and domestic
    staff (anyone really). Basically you're safer when everyone is educated.

    ReplyDelete
  10. ஓட்ஸ் என்னும் அரக்கன்..

    இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவு என ஆகிவிட்டது. அதுவும் நீரிழிவு நோயாளிகள்,உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

    10 ஆண்டுகளுக்கு முன்வரை நம்நாட்டில் ஓட்ஸ் இல்லை. ஆனால் இன்று ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்பனை ஆகிறது. இதற்கு பின்னால் பன்னாட்டு வணிக மோசடி உள்ளது.

    ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகவும் கொஞ்சம் ஐரோப்பிய நாடுகளிலும் விளையும் ஒரு பயிர்.அதை அப்படியே உணவாக சாப்பிட முடியாது. சில வழிமுறைகளில் தட்டையாக மாற்றப்படுகிறது. அதையும் நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்துக்கொள்ள முடியாது. சில கிராம் மட்டுமே (ஒரு ஸ்பூன்) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம். அதிலும் சத்து எதுவும் கிடையாது. பசியை கட்டும் குணம் மட்டுமே இதற்கு உண்டு.

    அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸ்-ஐ விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது. சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் க்கு சமம். ஒரு கிலோ ராகி மாவு 35 ரூபாய். 4 கிலோ ஓட்ஸ் 140*4= 560 ரூபாய்.

    எங்கோ ஆஸ்திரேலியாவில் விளையும் ( அவர்கள் அதிகம் சாப்பிடுவது இல்லை )ஓட்ஸை நாம் சாப்பிடுவதில் MNC கொள்ளை உள்ளது. சில ஆண்டுகளாக போலி விளம்பரங்கள் மூலமும் ,மருத்துவர் மூலம் கட்டாயப் படுத்தியும் நம்மை அடிமை ஆக்கிவிட்டன.[குறிப்பாக பெப்சி நிறுவனத்தின் QUAKER பிராண்ட். குளிர்பான தொழிலில் இந்திய நிறுவனங்களை ஒழித்ததுபோல உணவில் இந்திய பாரம்பரிய உணவுகளை ஒழிக்கப் பார்க்கிறது.]

    அங்கிருந்து இங்கு வர ஆகும் எரிபொருள் செலவு, MNC நிறுவனங்களின் கொள்ளை லாபம் எல்லாம் சேர்த்து பயனற்ற பொருளை நம் தலையில் கட்டுகின்றன.
    அதைவிட ராகி,கம்பு,சோளம்,திணை,வரகு,சாமை .. எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை. விலையும் குறைவு.
    சிந்தியுங்கள்.......

    ReplyDelete
  11. Intha govmenta thirutharathuku yaravathu vangapa. Nangaellam thinam thinam sethukittu irukom. Ayya niyamaaaaaarae yaravathu kelungapa.Intha selection lista cancel panrathuku entha samiyavathu vangalaen. intha aniyatha thattikakarathuku yaravathu irukingala? Yaravathu valli iruntha solugalaen
    Please. Yaravathu reply pannugalaen.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive