Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்க உத்தரவு

             அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிப்புரியும் பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து, தகவல் அனுப்புமாறு, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

                  கோவை மாவட்டத்தில், 1090 தொடக்க மற்றும் ௩௦௭ நடுநிலை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இதில், அரசுப்பள்ளிகளில் மட்டும், இசை, ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட பாடங்களுக்கு, பகுதிநேர கலையாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, இம்மாத துவக்கத்தில், மாதந்தோறும் 2,000 ரூபாய் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என தகவல் வந்தது.

        தொடர்ந்து, சம்பள தொகை அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, மாவட்டந்தோறும் அரசுப்பள்ளிகளில் பணிப்புரியும் பகுதிநேர கலையாசிரியர்களது தகவல்களை சேகரித்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பணிப்புரியும் பகுதிநேர கலையாசிரியர் குறித்த விபரங்களை அனுப்புமாறு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தின் சார்பில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.




1 Comments:

  1. பகுதி நேர கலை ஆசிரியர்களின் விவரங்கள் கோவை மாவட்டத்தில் தொடக்கக்கல்வி அலுவலரால் கேட்கப்பட்டது 2000 ஊதியம் அதிகரித்து வழங்குவது தான் காரணமா? பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்களா? இது போன்று விவரங்கள் சேகரிப்பது என்பது பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியல் தேவையில்லாமல் ஆசையை உண்டாக்குவதாக உள்ளது.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive