Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET Article: மனதில் துக்கம்! கண்களில் கண்ணீர்!

         அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு வருங்கால ஆசிரியர்கள் எழுதும் கண்ணீர் கடிதம்…..
      அம்மா நலமாக உள்ளீர்களா? உங்கள் நலத்திற்காக நாங்கள்  அனுதினமும் இறைவனிடம் வேண்டிக்கொண்டிரு;கிறோம்…… நாங்கள் படும் பாடினை சொல்ல பல ஏடுகள் போதாது…. 18.07.2014 அன்று சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் தமிழக விவசாயிகளுக்கு தாய்வீட்டு ஆடி சீதனமாக முல்லைபெரியாறின் 142அடி தண்ணீரை தந்தீர்கள் நன்றி……. ஆனால் ஆசிரியராகிய எங்களது கண்ணீரை துடைக்க மறந்தது ஏன் அம்மா??????

தாள் 2
           அம்மாதமிழுக்கு அமுதென்று பெயர்என ஏடுகள் சொல்லுகின்றனஆனால் அமுதத்தினை கற்பிக்கும் தமிழாசிரியர்களின் பணியிடக்குறைவினால், தமிழாசிரியார்களின் நிலையோ வேப்பங்காயாக கசக்கிறது

         அம்மா அறிவியல் சோதனைகளில் சாதனை படைத்திட்ட அறிவியல் துறை சார்ந்த ஆசிரியர்களின் பணியிடக்குறைவின் வேதனையை தீர்க்க எந்த ஆய்வும் இல்லைஎந்த ஆய்வகமும் இல்லை….உங்களைத் தவிர….

           இது போன்று அனைத்து பாடங்களுக்கும் பணியிடக்குறைவு உள்ளது அம்மா. அம்மா எங்களின் கதறல்கள் உங்களின் காதுகளுக்கு வரவில்லையா அம்மா….

           தாள் இரண்டுக்கு உள்ள பணியிடக்குறைவினை பணிவாய் எடுத்து வைக்கிறோம் தங்களின் பாதங்களின் அடியில்….கூடுதல் பணியிடம் கொடுத்து பல குடும்பங்களை வாழ வையுங்கள் அம்மா…..

தாள் 1
          அம்மா தாள் ஒன்றுக்கு உரிய ஆசிரியர்களின் நிலையினை சொல்ல வார்த்தையில்லை… அம்மா, தனக்கு ஆதரவாக இருந்த தன் கணவனையும் இந்திய இரானுவத்திற்கு தியாக உயிராக கொடுத்து கைம்பெண்னாக கைக்குழந்தையோடு நிற்கும் ஆசிரியை பற்றி சொல்லவா???

        அம்மா, ”நான்கு சுவருக்குள் அடைபட்டது நாங்கள் மட்டும் அல்ல எங்களின் கதறல்களும் கூடஎன்று ஏங்கும் மாற்றுத்திறனாளியான எங்களுடைய சகோதரனைப்பற்றி சொல்லவா???

           அம்மா, எத்தனை பணியிடம்?, என்ன முடிவு?, என்று விடியும்? என தெரியாமல் கதறும் ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்களின் நிலையினனை சொல்லவா??? அம்மா நினைக்கும் போதே நெஞ்சு வெடிக்கிறது……..
      
     அம்மா ஆசிரியராகிய எங்களின் மனநிலை மாற்றம்….ஏமாற்றம்எங்களின் கதறல்களை சட்டசபையில் எடுத்துரைக்க கூட நாதியற்றவர்களாய் இருக்கிறோம்… நித்தம் நித்தம் மனதில் துக்கம், கண்களில் இல்லை தூக்கம். தொண்டையை அடைக்குது துக்கம், 72000 ஆசிரியரின் மனதும் கலக்கம்…..

          தர்மத்தாய்க்கு அடுத்தபடியாக நாங்கள் வணங்கும் தமிழ்த்தாயே!! எங்களின் துயர் நீக்க சட்டசபையில் 110 விதியின் கீழ் கூடுதல் பணியிடம் பற்றிய அறிவிப்புகள் வெளியிடுவீர்கள் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம், என கண்ணீரோடு முடிக்கிறோம்

Article by P.Rajalingam, Puliangudi…Tirunelveli
 




67 Comments:

  1. seniorityக்கு மதிப்பெண் வழங்காத weightageமுறையையே இரத்து செய்ய தயவு கூர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. நண்பர் திரு . ராஜ லிங்கனாருக்கு வணக்கம் ... தற்போது தான் குற்றாலம் குடும்பத்தாரோடு சென்று விட்டு வீடு திரும்பினேன் .. தங்கள் கட்டுரையை கண்டேன் .. நாம் படும் துன்பங்களை தெள்ளிய நீரோடையில் கண்ட பளிங்கு போல எடுத்துரைத்தமைக்கு டெட் தேர்வர்களின் சார்பில் நன்றி ..
      உங்களோடு கை கோர்ப்போம் .. போராடுவோம் .. வென்றிடுவோம் .. நமது போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெரும் ...... நன்றி

      Delete
    3. immanuel sir, DOB wise namaku kudithirukara preference adikam
      (amma kandipa ayya voda seniority baniya pinpatravae matanga)

      Delete
  2. Suicide panninalthan ivargal thirunthuvargalo'.....'................

    ReplyDelete
    Replies
    1. நண்பரே வேண்டாம் இந்த விபரித முடிவு......புயலுக்கு பின் அமைதி தான் பொறுத்திருப்போம்.....

      Delete
  3. RAJA LINGAM BROTHER
    UNMAYAVE SUPER ARTICLE VERY VERY NICE ENAKU PADIKA PADIKA KANGALIL IRUNTHU KANEER VARA ARAMBITHU.VITTATHU INTHA TET EXAM AL KURAIVANA ALAVUTHAN LADIES PATHIKAPADUVARGAL APADIYE PATHIPU ERPATALUM PERIYA ALAVIRKU THERIYATHU EX: AM.......BUT PERIYALAVU PATHIPUM VETHANAIUM GENS KUTHAN ENA ORU FAMILY A MANAGE PANAKUDIYAVARGAL,,,,THANATHU PRTRORAI KADASI VARAI KAAPATRUM

    PORUPIL ULLAVARGAL,,,, THANATHU SAGOTHARA SOGATHIRIKALUKU NALLA LIFE A ERPADUTHI KODUKUM KADAMAIL ULLAVARGAL IVARKALUKATHAN ETHANAI VEDHANAI RAJALINGA BROTHER IDHA EPPADI C.M AVARKALIN PAARVAIKU KONDU SELVATHU

    ReplyDelete
  4. RAJA LINGAM BROTHER 73000 PERIN VEDHANAIKALAI NAM KANDIPAGA AMMA AVARGALIN PAARVAIKU KONDU SELAVENDUM INI KAALAM THALTHA NETAM ILLAI UNGALUDAIYA ANAITHU MUYARCHIKALUKUM ENNAL MUDINTHALAVU HELP PANNA THAYARAGA IRUKIREN

    ReplyDelete
  5. நான் இதை கண்னிரோடு சொல்கிறேன்....என் திருச்சி கைம்பெண் சகோதரி செந்நீரோடு சொல்கிறாள்.....
    நான் இதை சுட்ட வடுவாக சொல்கிறேன்....
    என் மதுரை மாற்றுத்திறனாளி சகோதரன் அனலில் பட்ட புழு போல சொல்கிறான்.....
    நாம் அனைவரும் சேர்ந்து இந்த அவலங்களை CM பார்வைக்கு சட்டமன்ற கூட்டம் முடியும் நாட்களுக்குள் கொண்டு செல்ல வேண்டும்......சேர்ந்து கரம் கொடுப்பர்களா All TET candidates??????

    ReplyDelete
    Replies
    1. Nichayam varuven anna

      Delete
    2. கண்டிப்பபாக

      Delete
    3. நண்பரே நம்முடைய வேதனை உலகம் அறிந்த விசயம்.......முதலில் இதை பத்திரிக்கை துறைகளுக்கு கொண்டு போய் சேர்க்க நடவடிக்கை எடுக்க முன் வருவீர்களா????

      Delete
    4. I got evidence through RTI
      1.The TNTET questions have taken from Samacheer Book Only ,So We can get answers from the School book.
      2.Psychology the Syllabus will be 11-14 only.
      3.The questions from the TNTET Syllabus only , not from the G.K questions.
      4.Science Problem Question if we can solve the problem then only the answer is correct.

      So Can I get the mark through the Court for The answers I got from RTI.

      Kindly anyone send your Opinion.

      Delete
  6. ITHU MULUKKA MLUKKA UNMAIYANA KATTURAI SIR VERY GOOD JOP SIR NALLATHE NADAKKUM WAIT PANNUVOM

    ReplyDelete
  7. AYYA UNGALUDAIYA INTHA PATHIVAI ANAITHU KALVI SAMBANTHAMANA BLOG LAYUM COPY PANNI PATHIVITTU ULLEN AYYA

    ReplyDelete
  8. RAJALINGAM SIR KANDIPAGA ENGALIN AATHARVU KIDAIKUM ORUVAR IRUVARIN KANEER ALLA ITHU OTUMOTHA 72000 KUDUMBANGALIN KANEER

    ReplyDelete
  9. ராஜலிங்கம் சார் வணக்கம் . உங்கள் article அம்மா பார்வைக்கு சென்றால் கன்டிபாக நல்ல முடிவு கிடைக்கும் . இறைவன் அருள் கிடைக்கும் .

    ReplyDelete
    Replies
    1. நண்பரே இது என்னுடைய கட்டுரை என்று சொல்வதை விட.......72000ம் பேரின் கண்னிர் ஏக்கம் என்றே சொல்லுங்கள்.....
      எனக்கு தேவை உங்களது கருத்து மட்டும் அல்ல....
      உன்களுடய கரம் தேவை கொடுப்பீர்களா????
      சட்டமன்றம் முன் செல்ல....

      Delete
  10. Dear padasalai so many essays, like this, are publishing in your website day by day. So many people bottled out their emotions and agonies in your website. so many commented what they had thought. But I have a doubt whether all these news' will reach the TRB board or CM or any other person of importance. Nearly for one year all the TET candidates live their life without any happiness. They are not sure about how they are going to tackle their family members. All the members in the family will blame us but they do not think about what is happening in the society. So i want to know whether these essays and all our comments will be noticed by the officials or not. Please I want them to pay attention to the candidates. so many of them are dejected.

    ReplyDelete
  11. இராஜலிங்கம் சகோதரரே,பதில் தந்தமைக்கு மிக்க நன்றி. தங்களின் பதில் மனதிற்கு மிகவும் ஆறுதலையும், தைரியத்தையும் அளிக்கின்றது சகோதரரே.

    ReplyDelete
    Replies
    1. பர்வின் சகோதரியே தங்களின் தடைகளை தாண்டி எங்கள் பாடசாலையோடு இணைந்தமைக்கு நன்றி......
      அரசை நாடுவோம் இறைவனனின் துணையோடு.....நல்லதே நடக்கும்.......

      Delete
  12. இராஜலிங்கம் சகோதரரே,பதில் தந்தமைக்கு மிக்க நன்றி. தங்களின் பதில் மனதிற்கு மிகவும் ஆறுதலையும், தைரியத்தையும் அளிக்கின்றது சகோதரரே.

    ReplyDelete
    Replies
    1. Sagodariye enakku urdu paper 1 pass panna yedavadu tips kodungal pls pls sagodariye

      Delete
  13. Thiru Rajalingam nabare idharku pep 1 candidates anaivarum sagumvarai unnaviradham irupadhal mattume oru mudivu kidaikkum

    ReplyDelete
  14. DEAR ALL, PUT ONE CASE AGAINST TRB TO PUBLISH THE SUBJECT WISE RANKING FOR ALL CANDIDATES INCLUDING OVERALL RANKING , COMMUNITY RANKING BEFORE PUBLISH THE SELECTION LIST.

    ReplyDelete
  15. Sajitha sagodariye neengal paper1. il urdu va illa tamil moziya

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் சகோதரரே, நான் தமிழ் படித்தவள்.

      Delete
  16. Rajalingam anna enoda age 25. Last ah vanda expected cut off la sc ku 70.6 cut off nu soli irukanga . Enoda weightage 70.2625 anna. Paper 1. Antha news publish aana nal la irundu na thungala anna. Ithu unmayana news ah anna

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக இல்லை......கட்-ஆப் குறையும்.......
      சிலர் SC- க்கு 400 பின்னடைவு பணியிடத்தை மறந்து விட்டார்கள் போலும்.....

      Delete
    2. Sola varthaigal ilai anna. Thanks ipotan muchu vidura feel varuthu anna. Kannerudan ungal sagothari nandri solgiren anna. Thangalen aaruthal varthaiku

      Delete
  17. nice words it medicines to all tet candidates and also reders

    ReplyDelete
  18. School education department junior assistant joint pannuvathu eppo.

    ReplyDelete
  19. thanks for ur remedial words sir

    ReplyDelete
  20. இராஜலிங்கம் சகோதரரே,முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

    ReplyDelete
    Replies
    1. உறுதியாக அதிகரிக்கும் சகோதரியே.,.....
      300க்கும் மேலான முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வில் சென்று விட்டனர்.......

      Delete
    2. Rajalingam sir,
      appo PG CV CANDIDATES ELLARUKUM POSTING KIDAIKUMA please sollunga. 300 athigamaguma. Private job vittachu last cut off ellarukum velai kidithal nallathu. Please confirm news sollunga.

      Delete
    3. நான் சொல்வதை விட......அரசு இம்மாத இறுதிக்குள் நல்ல பதில் தரும்...

      Delete
  21. அடுத்த மாத தொடக்கத்தில் தாள் 2 க்கான செலக்சன் லிஸ்ட் வர போகுது. அதுல. ரிஜிஸ்டா் நம்பா் பெயா் வெயிட்டேஜ் மாா்க் அனைத்தையும் போடுவாங்களா. இல்லை சென்ற ஆண்டு TNPSC மாதிாி நம்பர மட்டும் போட்டுட்டு இவா்களெல்லாம் செலக்ட் னு சொல்லி நம்மள ஏமாத்த போறாங்களோ தொியல.

    ReplyDelete
  22. raja lingam sir kalaikathir news aduthu vara pogum paper 1 posting pathi thana solierukanga.........................

    ReplyDelete
    Replies
    1. Yes.....
      Adutha TET paper-1kku posting kuraivu than.....ippothu posting kattayam irukkum

      Delete
  23. paper 1 pathi news epa varum endru pathu pathu veruthu poiachu................

    ReplyDelete
  24. Madurai bench case details today Mr. Nagamuthu
    WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    33. WP(MD).10747/2008 M/S. B.A. AJMAL KHAN AGP(W) (COUNTER FILED)
    (Service) J.M.HASSNUL BAZARI
    For Direction
    MP(MD).1/2010 - DO -
    For Stay
    MP(MD).2/2008 - DO -

    34. WP(MD).12102/2008 M/S. ISAAC MOHANLAL AGP(W)
    (Service) S.XAVIER RAJINI
    AND
    WP(MD).12103/2008

    35. WP(MD).864/2009 M/S. ISAAC MOHANLAL AGP(W)
    (Service) S.XAVIER RAJINI (COUNTER FILED)

    36. WP(MD).6328/2009 M/S. S.XAVIER RAJINI AGP(W) FOR R1 AND R2
    (Service) M.J.SHABU JOSE

    37. WP(MD).7770/2009 M/S. T. LAJAPATHI ROY AGP(W) FOR R1 AND R2
    (Service) M.KALIFULLAH
    For Stay
    MP(MD).2/2009 - DO -

    ReplyDelete
  25. rajalingam sir ivarkalli nambi neenga engayum pogathinga varen,varen solluvanga apprum orthari kuda varamattanga phone switch off seuthu vittu poiyruvanga apprum 2 days kalitthu sir ponigala,ennachu,enna sonnaga nnu veetlairundhe visiyatthai vanguvanga so iverkali nambi pogathinga please ennadao personaL ADVISE ITHU.

    ReplyDelete
  26. rajalingam sir
    ellorukahavum nengal kural koduthatharku nanrigal pala.

    ReplyDelete
  27. rajalingam sir
    when will release group 8 result? please if you know about this kindly tell me.

    ReplyDelete


  28. இன்னுங்கூட நாம் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டுதான் இருக்கிறோம், அம்மா ஏதாவது செய்வார் என ! அனால் அம்மா என்ன செய்துவிடப் போகிறார் ? அவருக்கு அடுத்த தேர்தல் இருக்கிறது, அதற்கான யுத்திகள் இருக்கின்றன, இன்னும் உயரவேண்டும், சாதனைகள் பல செய்திட வேண்டும் , மத்திய அரசுக்கு கடிதங்கள் சிலபல எழுதிட வேண்டும், எதிர்க்கட்சிகளைத் திட்டி அறிக்கைகள் விட்டிட வேண்டும் , இப்படியாக அவருக்கு காத்துக்கிடக்கும் பணிகள் ஏராளம் ! இந்த அதி முக்கியமான பணிகளுக்கு மத்தியில் அவர் ஆசிரியர்களை கவனிக்க நேரம் ஏது ?

    முப்பதாம் தேதிக்குள் என்ன பெரிதாய் நடந்து விடப் போகிறது ! காத்திருந்த இலவு வெடித்து உள்ளே இருப்பது பழம் அல்ல எல்லாம் வெறும் பஞ்சு என்ற உண்மைதான் கிளிகளுக்கு இங்கே விளங்கப் போகிறது !

    ஐயா, ஒருஅரசுப்பள்ளி மாணவனின் தரத்தை, ஒரு தனியார் பள்ளி மாணவனின் தரத்திற்கு உயர்த்திட என்னென்னமோ செய்கிறதே இந்த அரசாங்கம் !

    ஆனால்,

    ஒரு தனியார் பள்ளி ஆசிரியனின் தரத்தை ஒரு அரசுப்பள்ளி ஆசிரியனின் தரத்திற்கு உயர்த்திட ஒன்றுமே செய்வதில்லையே ஏன் ஐயா ?

    தனியார் பள்ளி ஆசிரியனும் ஒரு குடிமகன் தானே ! அவனும் தானே ஓட்டுப் போடுகிறான், அவனும் தானே சாக்பீசும் கையுமாக கரும்பலகை முன் நாளெல்லாம் கால் வலிக்க நின்று கொண்டு தொண்டைத் தண்ணீர் வற்ற வற்ற , தன் உதிரத்தையெல்லாம் வார்த்தைகளாக்கி பாடம் நடத்துகிறான் ! அவனுக்குப் போதிய மரியாதையும், ஊதியமும், சுமையில்லாத நெருக்கடியில்லாத பணிசூழலும் கொடுத்திட இங்கே சட்டங்கள் இல்லையா ? ஆணைகள் இல்லையா ? அல்லது எதுவுமே இல்லையா ?

    இருக்கிற இருப்பில் எல்லா ஆசிரியர்களுக்கும் அரசுப்பணி என்ற கவர்ச்சி மிட்டாயை வழங்க முடியாது ! ஆனால் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஒரு ஆசிரியனின் வாழ்க்கைத் தரத்தை பனித் தரத்தை உயர்த்தினால் அதுவே அவனுக்கு நல்ல ஆரோக்யமான மனநிலையைத் தந்து இன்னும் ஊக்கமாக , இன்னும் உற்சாகமாக அவனை ஓட வைக்குமே, அவன் இன்னுங்கூட தன் இரத்தத்தை வார்த்தையாக்கி கரும்பலகையின் முன் கத்துவானே !

    அதிகாரம் இருப்பவர்கள் யாராவது தயை கூர்ந்து இதனைச் சற்று சிந்தித்தப்பாருங்களேன் ............






    ReplyDelete
  29. Sir any one tel me am zoo major.wt 61.37..enaku chance iruka...tel me fronds.

    ReplyDelete
  30. ராஜலிங்கம் ஐயா,

    உங்கள் ஆதங்கம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நில்லாமல் TET ஆல் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரையும் ஒரு சகோதர பாசத்துடன் ஒரு தாய்மை உள்ளத்துடன் அரவணைத்துச் செல்கிறது ! அதற்காகவே உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !

    முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் சுமார் இருபதாயிரம் பேருக்கு அரசு ஆசிரியப்பணி கிடைத்ததுமே ஆசிரியர் சமூகம் மட்டுமல்லாது சமுதாயத்தின் பிற தரப்பினரும் அதை ஒரு திருவிழா போலத்தான் பார்த்தார்கள் ! " ஆசிரியர் தகுதித் தேர்வு " என்ற கவர்ச்சி அப்போதிருந்துதான் மக்கள் மனதில் தொடங்கியிருக்கக் கூடும் !

    ஒரு லாட்டரியில் பரிசு விழுவது போல, ஒரு குதிரை ரேசில் வெற்றி பெறுவது போல, ஒரு அதிர்ஷ்டப் புதையலை திடீரென்று பெறுவதைப் போல .........இதைப்போல இன்னபிற " போல " க்களைப் போலத்தான் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதும் இங்கே அதிர்ஷ்டத்தின் பிடிக்குச்சென்றுவிட்டது !

    கஷ்டப்பட்டு தேர்வுக்குப் படித்தாலும், படித்த கேள்விகள் வருவது ஒரு அதிர்ஷ்டம், தேர்வில் குருட்டாம்போக்கில் தெரிவு செய்யும் விடைகள் சரியான விடைகளாவது ஒரு அதிர்ஷ்டம், நம் பாடப்பிரிவைச் சேர்ந்தவர்கள் குறைவான விழுக்காட்டில் தேர்ச்சி பெறுவது ஒரு அதிர்ஷ்டம், நம் பாடப்பிரிவுக்கென்று கணிசமான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது ஒரு அதிர்ஷ்டம், நாம் பெற்ற மதிப்பெண்கள் நமக்குச் சாதகமான ஒரு முறையில் மதிப்பிடப்படுவது ஒரு அதிர்ஷ்டம், வழக்குகள் பல போடப்பட்டு நமக்குச் சாதகமான ஒரு தீர்ப்பைப் பெற்று, சாதகமான அரசாணைகள் அமையப்பெறுவது ஒரு அதிர்ஷ்டம் ........இத்தனையும் தாண்டி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரிராக ஆகிவிடுவது மாபெரும் ஒரு அதிர்ஷ்டம் !

    ஆக, இங்கே ஒருவர் ஆசிரியராக ஆவது தகுதியின் அடிப்படையில் இல்லை, அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலேயே நடக்கிறது.

    மேலும், இந்தத் தகுதித் தேர்வில் முதலில் தொண்ணூறு மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் தங்களுக்கு பணி உறுதி என்ற நம்பிக்கையில் பார்த்துக்கொண்டிருந்த தனியார் ஆசிரியப்பணியை விட்டுவிட்டார்கள்....சில இடங்களில் பள்ளி நிர்வாகமே அவர்களை பணியில் இருந்து நீக்கியது !

    அதன் பின்னே நடந்ததுதான் விதியின் விளையாட்டு ! 5 சதவிகித மதிப்பெண் தளர்வு என்ற பெயரில் ஒரு விதி வந்தது, வெயிட்டேஜ் என்ற பெயரில் மற்றொரு விதி வந்தது , இதற்கிடையே வழக்குகள் , வழக்குகள் , மேலும் மேலும் வழக்குகள் என்று தொடர்ச்சியாக பல விதிகள் வந்து , விதிகள் தமக்குள்ளே வலிந்து விளையாட ஆரம்பித்தன. இதில் பகடைக்காயாக உருட்டப்பட்டது தேர்வு எழுதிய ஆசிரிய இனம் !

    இந்தப் பாழாய்ப்போன மனம் எத்தனை அதிர்ச்சிகளைத் தான் தாங்கும் ! எத்தனை வலிகளைத் தான் ஏற்கும் ! நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை என்று நம்பிக்கை என்ற வார்த்தையே நம்பிக்கையின்மை உணர்வைத் தருகிறதே !

    இந்தப் பழம் பழுக்கும், பழுக்கும் , ஒருநாள் நம் பசியாறும் என்று இலவு காத்துக்கொண்டிருந்த கிளியின் நிலைமையாக அல்லவா ஆகிவிட்டது நம் நிலையும்...........

    ஒரேயடியாச் சாகடிப்பது என்பதை விட, சிறுகச் சிறுக சித்ரவதை செய்து சாகடிப்பதுதானே கொடுமையிலும் கொடுமை ! அதுதானே ஐயா இங்கே நடந்து கொண்டிருக்கிறது .......

    நானுங்கூட, ஆசிரியர் வேலை கிடைத்தால் அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்த அதைச் செய்யலாம், இதைச் செய்யலாம் , அரசுப்பள்ளி மாணவர்களை மாநில இடங்களைப் பெற வைக்கலாம் , அப்படி இப்படி என்று கனவு கண்டு கொண்டிருந்தேன் .........இப்போது ??????????

    இதே, இந்தக் கனவுகளை ஒரு தனியார்பள்ளியை மனதிற்கொண்டு என்னால் காண இயலவில்லை ! காரணம் அங்கே ஆசிரியர்களுக்குச் சுதந்திரம் இல்லை , ஆசிரியர்கள் ஆசிரியர்களாகவே நடத்தப் படுவதில்லை ! அவர்கள் அங்கே staff களாக மட்டுமே கருதப் படுகிறார்கள், நடத்தப்படுகிறார்கள் ! ஆனால வெகு சொற்பமாக அரிதிலும் அரிதாக சில தனியார் பள்ளிகளே ஆசிரியர்களுக்கு போதிய மரியாதையும், ஊதியமும், சுமைகளற்ற பணிச்சூழலையும் கொடுப்பதாக இருக்கிறது ! அது போன்ற தனியார் பள்ளிகள் கிடைத்தால் அரசு வேலை என்ற மாய வலைக்குள் விழுவதற்கான அவசியமே இல்லையே !

    ReplyDelete
    Replies
    1. kathai pesa ellame nalla than irukku sir, nan tet issue sammanthamaga oru article eluthiyullen pala kelvigalaga ungalal mudinthal, ungaludan sanda poda ivaru ketka villai, thiru.gautham1987@gmail.com,, contact me plzzzz

      Delete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. rajalingam anna enoda wtg75.93 bc paper1 age28 seniority 2008 any chance for me pls reply anna?

    ReplyDelete
  33. rajalingam anna enoda wtg75.93 bc paper1 age28 seniority 2008 any chance for me pls reply anna?

    ReplyDelete
  34. குருசந்திரன் நண்பருக்கு நன்றிகள் பல...
    பிரித்தாளும் அரசின் சூழ்ச்சியால் தர்மதாயின் கைகளும் கட்டப்பட்டு விட்டது.....விடுங்கள் ஐயா.....
    நினைத்தாலே நெஞ்சு வெடிக்கிறது.....

    ReplyDelete
  35. nitharsanamana unmai.... nanbare...........

    ReplyDelete
  36. I got evidence through RTI
    1.The TNTET questions have taken from Samacheer Book Only ,So We can get answers from the School book.
    2.Psychology the Syllabus will be 11-14 only.
    3.The questions from the TNTET Syllabus only , not from the G.K questions.
    4.Science Problem Question if we can solve the problem then only the answer is correct.

    So Can I get the mark through the Court for The answers I got from RTI.

    Kindly anyone send your Opinion.

    I am in zoology Major

    ReplyDelete
  37. இன்னும் இந்த அரசாங்கத்தை நம்புவது மடமை, ,தெளிவில்லாத ஆசிரியர் கள் ,,,,

    ReplyDelete
  38. inge padasalai valai thalathil comment seiyum allathu commentku reply seiyum nabargalil yaaravathu oruvar ennau thodarbu kollavum, nanum tet muditha pattathari, mudinthal en kelvigalukku bathil koorungalen paarkalam, enathu kelvigalai comment boxil ppoda mudiyavillai, avalavu kelvigal ennidam undu, thiru.gautham1987@gmail.com

    ReplyDelete
  39. paadasali nadathum nanbaridam eppadi thodarbu kolvathu?
    en kelvigalukku padasalai valai thalathal bathil koora mudiyuma?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், தங்கள் கேள்விகளை நமது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இயன்றவரை பதில் அளிக்க விழைகிறோம்.! - Our Email Id: padasalai.net@gmail.com
      நன்றி!
      அன்புடன் - பாடசாலை.

      Delete
    2. sir, my cutoff 73.7 in paper 2 , english .bcm .is it possible to get the job,sir?

      Delete
  40. dear brother a great gratitude for you as you have taken the mind to represent the total 73000 really a good letter for the cm mam and lets hope she definitely reads it and bring a good resolution for all these. lets stand united for these. thank you.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive