Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியையாக இருப்பவர் அழக்கூடாது - நீதிபதி திரு. நாகமுத்து

          கவுன்சலிங்கில் உத்தரவு வழங்கியும் பயனில்லை இடமாறுதல் பெற்ற பள்ளியில் வேறொரு ஆசிரியர் நியமனம்

          மதுரை, பீ.பீ.குளம், சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் சங்கீதா. ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனு: சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக (கணிதம்) 2008ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறேன். வயதான தாய், நோய் தாக்கமுள்ள குழந்தை ஆகியோரை உடன் இருந்து கவனிக்க வேண்டி இருந்தது. இதனால் மதுரை, திருப்பாலை அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிதாக துவக்கப்பட்ட பட்டதாரி கணித ஆசிரியர் பணியிடத்திற்கு மாற்றம் செய்ய கோரினேன்.
             இதன்படி 24.7.2012ல் மதுரையில் நடந்த ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில் என்னை திருப்பாலை பள்ளிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு நகல் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு (சிஇஓ) கிடைக்காததால் என்னை அங்கிருந்து விடுவிக்கவில்லை. ஆனால் 22.8.2012 வரை மாறுதல் செய்யப்பட்ட திருப்பாலை பள்ளியில் நான் பணியில் சேரவில்லை எனக்கூறி அந்த இடத்திற்கு திருச்சி மாவட்டத்திலிருந்து கிரிஜா என்பவரை மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.

        கவுன்சலிங் உத்தரவை அதிகாரிகள் மதிக்கவில்லை. தினசரி 4 மணிநேரம் பயணிப்பதில் சிரமம் உள்ளது. எனவே என்னை கவுன்சலிங் உத்தரவுப்படி திருப்பாலை பள்ளிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடப்பதால் மனுதாரரின் வக்கீல் ஆஜராகவில்லை. இதனால் ஆசிரியை சங்கீதா நீதிபதி முன் ஆஜராகி வாதாடினார். சிஇஓ நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட் டார். இதைத் தொடர்ந்து சிஇஓ ஆஞ்சலோ இருதயசாமி நீதிபதி முன் ஆஜராகி விளக்கமளித்தார்.

          மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் குறிப்பிடும் புகார் உண்மையென தெரியவந்தால் நீதிமன்றம் கடும் நடவடிக்கையை எடுக்கும். லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய நிலை வரும். இந்த ஆசிரியைக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது, தற்போதைய நிலை, மனுமீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை ஆகியவை குறித்து மேலதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நாளை (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராகி முழு அறிக்கையை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பெண்கள் அழக்கூடாது

           வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகிய ஆசிரியை சங்கீதா, நீதிபதி முன் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது பேசிய நீதிபதி, நீதிக்காக போராடிய கண்ணகி மதுரையை எரித்தார். எனவே பெண்கள் எதற்கும் அழக்கூடாது. போராட வேண்டும். அதுவும் ஆசிரியையாக இருப்பவர் அழக்கூடாது என்றார்.




20 Comments:

  1. Wonderful message by hon.judge Nagamuthu sir... Thanks for publishing this padasalai....

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுளும் வாழ்கிறார். மிருகமும் வாழ்கிறது ...
      பல நேரங்களில் கடவுள் வெளிவருகின்றார் ...
      சில நேரங்களில் மிருகமும் வெளி வருகிறது ...

      நியாயம் அந்த ஆசிரியைக்கு கிடைக்க வேண்டுகிறேன் ...
      நீதியரசர் ஐயா .நாகமுத்து அவர்கள் நல்லதொரு தீர்ப்பும் , தவறிழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் ...
      நன்றி

      Delete
  2. பாடசாலை ஆசிரியர் அவர்களே
    மதிப்பெண் தளர்வு வழக்கு பற்றிய தகவல்களை கூறவும்

    ReplyDelete
  3. JAYAPRIYA MAM HISTORY BC KU WEIGHTAGE SOLLUNGA CUT OFF PLS, PLS,PLS.

    ReplyDelete
  4. MATHEMATICS :(381 +530 =911)(BACKLOG VACANCIES +CURRENT VACANCIES =TOTAL)
    COMMUNAL TURN
    1.GENDRAL TURN(OC)
    GT =0+ 91 =91
    GT T =0+ 23 =23
    GT W =0+ 40 =40
    GT W T =0+ 10 =10
    GT PH =11+ =11
    GT W PH =4+ =4
    TOTAL =15+164(INCLUDE 5PH)=179(INCLUDE 5PH)

    SO GT +GT W =131

    2.BC
    BC =0+ 78 =78
    BC T =0+ 20 =20
    BC W =0+ 34 =34
    BC W T =0+ 8 =8
    BC PH =8+ =8
    BC W PH =4+ =4
    TOTAL =12+ 140(INCLUDE 4PH)=152(INCLUDE 4PH)

    SO BC +BC W =112

    3.BCM
    BCM =21+ 11 =32
    BCM T =0+ 2 =2
    BCM W =8+ 5 =13
    BCM W T =0+ 1 =1
    BCM PH =1+ =1
    BCM W PH =1+ =1
    TOTAL =31+ 19(INCLUDE 1PH)=50(INCLUDE 1PH)

    SO BCM +BCM W=45

    4.MBC/DNC
    MBC =44+ 59 =103
    MBC T =0+ 15 =15
    MBC W =19+ 26 =45
    MBC W T =0+ 6 =6
    MBC PH =5+ =5
    MBC W PH =2+ =2
    TOTAL =70+ 106(INCLUDE 3PH)=176(INCLUDE 3PH)

    SO MBC +MBC W=148

    5.SC
    SC =131+ 44=175
    SC T =0+ 12 =12
    SC W =56+ 20 =76
    SC W T =0+ 4 =4
    SC PH =6+ =6
    SC W PH =2+ =2
    TOTAL =195+ 80(INCLUDE 2PH)=275(INCLUDE 2PH)

    SO SC +SC W =251

    6.SCA
    SCA =27+ 9 =36
    SCA T =0+ 2 =2
    SCA W =11+ 4 =15
    SCA W T =0+ 1 =1
    SCA PH =1+ =1
    SCA W PH =1+ =1
    TOTAL =40+ 16(INCLUDE 1PH)=56(INCLUDE 1PH)

    SO SCA +SCA W=51

    7.ST
    ST =12+ 3 =15
    ST T =0+ 1 =1
    ST W =5+ 1 =6
    ST W T =0+ 0 =0
    ST PH =1+ =1
    ST W PH =0+ =0
    TOTAL =18+ 5 =23

    SO ST +ST W =21

    MATHEMATICS 911
    1.GT(OC) =179
    2.BC =152
    3.BCM =50
    4.MBC/DNC =176
    5.SC =275
    6.SCA =56
    7.ST =23
    TOTAL =911

    GT-GENDRAL TURN
    W-WOMEN
    T-TAMIL MEDIUM

    ReplyDelete
  5. Dear teachers , pls clear my doubts,பணியிடங்கள் நிரப்பப்படும் முறை எவ்வாறு அமையும்,அதாவது முதலில் backlock vaccancy,school edu,elementary edu,bc,mbc,sc schools,corporation schools,என்ற வரிசையில் ஒன்றை நிரப்பி பின் மற்றவற்றை நிரப்புவார்களா அல்லது அனைத்து பள்ளிகளையும் ஒன்று சேர்தது மொத்தமாக oc,bc,mbc,sc,st என்ற வரிசையில் நிரப்புவார்களா? அல்லது இதற்கு எதிர் திசையில் backlock,corporation schools,sc,mbc,bc schools,elementary edu,school edu என்ற வரிசையில் நிரப்புவார்களா?விளக்கம் அளிக்கவும்....நன்றி.....

    ReplyDelete
    Replies
    1. 30th varai wait panning a kowdar Sir....
      .Ella doubtum clear agidum

      Delete
  6. நாகமுத்து ஐயா தாங்கள் பல ஆண்டுகள் வாழ்க வளமுடன் .

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம் .. தங்களை இங்கே கண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ..

      Delete
    2. frnds
      backlog vacancies na enna antha vacancies yarukaga pls any one tell

      Delete
  7. Admin sir,

    2012Tet &
    2012 retest Tet களில் vacancy பற்றி விபரம்
    அதில் PASS செய்தவர்கள் விபரம்
    மேலும் BACKLOG விபரம் பற்றி தெரிந்தால் பதிவிடவும்.

    i.e 2012 tet zoology இல் 622 Vacancy என்றும்அதில் PASS 73 canditate மட்டும்
    மீதி 549 Backlog என்றார்கள்.
    தற்போது 405 PASS BUT VACANCY 260 ONLY. WHY.

    549???????

    ReplyDelete
  8. Apo tet la pass pannavangalukum (i mean 90 and above) job kedaikalana yarum azha kudathunu judge aiyya indirecta solraru la..

    ReplyDelete
  9. Mr.Nagamuthu ayya Oru pennagiya naan Tetla 60% edutha than pass nu sonna pothu alavillai.En1 vayathuk kulanthai ai veettil vittu kadan vangi coaching class poi pass seithathum 5% rela kodutha pothum alavillai. Vetil ullavargal athirstam kettaval endra pothum alavillai. Go 71 vanthathu appothum alavillai. 30 am thethi final result ill en pear varavillai enil aluvathaith thavira aaruthal vearillai.

    ReplyDelete
  10. Mr.Nagamuthu ayya Oru pennagiya naan Tetla 60% edutha than pass nu sonna pothu alavillai.En1 vayathuk kulanthai ai veettil vittu kadan vangi coaching class poi pass seithathum 5% rela kodutha pothum alavillai. Vetil ullavargal athirstam kettaval endra pothum alavillai. Go 71 vanthathu appothum alavillai. 30 am thethi final result ill en pear varavillai enil aluvathaith thavira aaruthal vearillai.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive