Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மானியக் கோரிக்கையில் சத்துணவு ஊழியர்களின் எதிர்பார்ப்பும் - ஏமாற்றமும்

           தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி.ஆர்.மேகநாதன் வெளி யிட்டுள்ளசெய்திவருமாறு: தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் கீழ் பள்ளி சத்துணவு மையங்க ளில் அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என்ற பெயரில் 1 லட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற் பட்ட ஊழியர்கள் 1982ம் ஆண்டு முதல் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக முறையான வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதமின்றி மிகவும் சொற்ப ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
 
         இதேபோல அங்கன்வாடி மையங்களிலும் ஒரு லட் சத்துக்கு மேற்பட்ட ஊழி யர்கள் பணிபுரிந்து வருகின் றனர்.30 ஆண்டுகளுக்கு மேல் அரசுப் பணியாற்றும் சத்து ணவு ஊழியர்கள் அனை வரையும் அரசு ஊழியர்க ளாக அறிவித்து ஊதியக் குழுவால் வரையறுக்கப் பட்ட ஊதிய விகிதம், வயது மூப்பின் அடிப்ப டையில் பணி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3500ம் குழந்தைகளுக்கு வழங்கும் உணவு தயாரிப்பு செலவினத்தை விலைவாசி உயர்வுக்கேற்ப உணவு ஒன்றிற்கு ரூ.3 ஆக உயர்த்தி வழங்கிடவும், காலிப் பணியிடங்களை நிரப்பி ஊழியர்களின் பணிச் சுமையை குறைக்கும் படியான அறிவிப்புகள் முதல்வரால் வெளியிடப் படும் என எதிர்பார்ப்புட னிருந்த மானிய கோரிக்கை யில் அறிவிப்புகள் ஏதும் வெளிவராத நிலையில் லட்சக்கணக்கான ஊழியர் கள் மத்தியில் மனவேத னையும், அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
          இந்நிலையில் முதல்வர் ஒட்டு மொத்த சத்துணவு ஊழியர்களின் எதிர்பார்ப்பு கள் நிறைவேறக்கூடிய வகையில் கோரிக்கைகளை நடைபெறக்கூடிய சட்ட மன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நிறை வேற்றிட தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள் கிறோம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive