Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு அலுவலகங்களில்புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.

           தமிழகத்தில், கடந்த, மூன்று ஆண்டுகளில், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை, புதுப்பிக்கத் தவறியவர்கள், தங்கள் பதிவு மூப்பை, மீண்டும் பெற, அவர்களுக்கு நடப்பாண்டு, சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும்' என, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மோகன் தெரிவித்தார்.
 
           சட்டசபையில், நேற்று, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. விவாதம் முடிவில், துறை அமைச்சர் மோகன், புதிதாக, 10 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விவரம்:அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில், பதிவு செய்துள்ளவர்களுக்கு, பதிவு புதுப்பித்தலுக்கான, கால வரம்பு, தற்போது, இரண்டு ஆண்டுகளாக உள்ளது. நடப்பாண்டில் இருந்து, காலவரம்பு, ஐந்து ஆண்டுகளாக உயர்த்தப்படும்.

              இதன் மூலம், 17 நல வாரியங்களில், பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறுபவர்கள் பயன் பெறுவர்.தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் (கட்டுமானத் தொழிலாளர்) நலத் திட்டத்தில், தற்போது அட்டவணையில் உள்ள, 38 வகை தொழில் இனங்கள் உள்ளன. இவற்றுடன், புதிதாக 15 கட்டுமானத் தொழில் இனங்கள், நடப்பாண்டுசேர்க்கப்படும்.கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பு இயக்குனரகம் மூலம், நடப்பாண்டு நடத்தப்படும். இதற்கு, நல வாரிய நிதியிலிருந்து, 32 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.தொழிலாளர் நலச் சட்ட விதிகளை மீறும், தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது தொடரப்படும் வழக்குகளை, விரைவில் நடத்தி முடிக்க, நடப்பாண்டு, இரண்டு சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர்.

கடந்த, 2011 முதல், 2013 வரை, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை, பல்வேறு காரணங்களால், புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள், தங்களின் பதிவு மூப்பை மீண்டும் பெறவும், அதன் மூலம், வேலைவாய்ப்பை பெற்றிடவும், நடப்பாண்டு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். இதனால், ஒரு லட்சம் பதிவுதாரர்கள் பயன் பெறுவர்.தமிழகத்தில், 12 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், வேலைவாய்ப்பு அதிகம் உள்ள, வெல்டர், எலக்ட்ரீசியன், ஒயர்மேன், ஏ.சி., மெக்கானிக் போன்ற தொழில் பிரிவுகள், 10.86 கோடி ரூபாயில், கூடுதலாக துவக்கப்படும்.நாகர்கோவில் மற்றும் உளுந்துார்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோருக்கென, புதிதாக பொருத்துனர் தொழிற்பிரிவு, 160 கோடி ரூபாய் செலவில் துவக்கப்படும்.தொழிற்பள்ளிகளில் நடத்தப்படும், தொழிற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியில், மாணவர் சேர்க்கைக்கான, வயது உச்சவரம்பு, 40 முதல் 50 ஆக உயர்த்தப்படும்.

நடப்பாண்டு முதல், பொது அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், சேர விரும்பும் மகளிருக்கு, வயது உச்ச வரம்பு நீக்கப்படும்.பெருங்குடி (மதுரை), திருநெல்வேலி புறநகர், துலுக்கர்குளம் புறநகர், கொண்டாநகரம், நான்குநேரி புறநகர், மோரூர், ஆகிய பகுதிகளில், ஏற்கனவே இயங்கி வரும், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களுடன், 28.11 லட்சம் ரூபாய் செலவில், இணைக்கப்பட்டு, திட்டம்விரிவுபடுத்தப்படும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive