Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முழங்காலிடுமாறு பணிக்கப்பட்ட ஆசிரியருக்கு 3 லட்சம் நஷ்டஈடு; அது அன்பளிப்பாக ஆசிரியர் சங்கத்துக்கு

                தென்பகுதி பாடசாலை ஆசிரியர் ஒருவரை முழங்காலிடுமாறு பணிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து குறித்த ஆசிரியருக்கு நஷ்டஈடாகக் கிடைத்த 3 லட்சம் ரூபா பணத்தை அவர் இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
 
          பாதிக்கப்பட்ட ஆசிரியர் சார்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் வழக்குத் தொடர்ந்திருந்தது. விசாரணைகளின் முடிவில் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு 3 லட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
         இவ்வாறு நஷ்டஈடாகக் கிடைத்த பணத் தொகையை அந்த ஆசிரியர் இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் வழங்கி அந்த நிதியை மாணவர் நலன்களுக்கு செலவிடுமாறு கோரியுள்ளார். இதேவேளை, மற்றொரு ஆசிரியரும் 40 ஆயிரம் ரூபாவை அன்பளிப்பாக தமது சங்கத்துக்கு வழங்கியுள்ளார் என்று இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive