Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இலவச நோட்டு, புத்தகம் வினியோகம்: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'


          சிவகங்கையில், இலவச நோட்டு, புத்தகம் வினியோகம் தொடர்பாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டார்.

      நடப்பு கல்வியாண்டு கோடை விடு முறைக்கு பின், ஜூன் 2ந்தேதி பள்ளிகள் திறக்கும் போது, மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டது. இதன்படி, நோட்டு, புத்தகம், காலணி, பை உள்ளிட்ட நலத்திட்டங்கள் மாணவர்கள் வழங்கப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய இரு மாவட்டத்திற்கு ஒரு இணை இயக்குனர் வீதம் பள்ளிக்கல்வித்துறை நியமித்தது. ஜூன் 2ல் குறிப்பிட்ட சில பள்ளிகளில் காலை முதலே இணை இயக்குனர்கள் ஆய்வு செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இடைநிலைக்கல்வி இணை இயக்குனர் முத்து பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது, இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கியது குறித்து, உறுதி செய்வதற்கான மாணவர்களின் கையெழுத்து பெறவில்லை என்பது தெரிய வந்தது. இந்நிலையில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கருதி, அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, இணை இயக்குனர் உத்தரவிட்டார். முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அவருக்கு விளக்க 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர். அவரது பதிலை பொறுத்து, அவர் மீதான நடவடிக்கை தெரிய வரும் என, சிவகங்கை கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.




1 Comments:

  1. ப்ரியங்கா6/07/2014 9:43 pm


    சிவகங்கை மாவட்டத்தில், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இடைநிலைக்கல்வி இணை இயக்குனர் முத்து பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது, இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கியது குறித்து, உறுதி செய்வதற்கான மாணவர்களின் கையெழுத்து பெறவில்லை என்பது தெரிய வந்தது. இந்நிலையில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கருதி, அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, இணை இயக்குனர் உத்தரவிட்டார். முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அவருக்கு விளக்க 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர்.
    முத்துபழ்னிசாமியே சொல்கிறார் மாணவ்ரிடம் கையெழுத்து பெறவில்லை எனில் மாணவ்னுக்கு அனைத்து இலவசங்கள் கொடுத்தாகிவிட்டது என்பதே பொருள். முத்துவுக்கு என்ன முத்ல்நாள் பள்ளி நடத்துவது என்பது எவ்வளவு கஷ்டம். அனைத்து த்ரப்புகக்லிருந்து ஒத்துழைப்பு வேண்டும்; நீ இய்க்குனரா இருந்தா என்னா, குக்கிராமத்திற்கு ஜீப்பில் வ்ராமல் பஸ்ஸின் பயனித்தும், விருந்தினர் மாளிகையில் ந்ட்ச்த்திர அந்த்ஸ்து உள்ள் ஓட்டலில் தங்காமல் பள்ளிக்கூடத்தில் இரவு தங்கிவந்து பஸ்ஸில் பயனித்து வ்ந்து ஆய்வு செய்தால் நீ உண்மையிலேயே கெட்டிக்காரன். சரி த்.ஆ நோட்டீஸ் கொடுக்கிற நீ ஏன் முதலில் மு.க.அ , மா.க.அ அவர்க்ள் சரியாக சரிபார்க்காததால் தான் கையெழுத்ட்து பெறவில்லை. கையெழுத்து பெற்றுதான் வழங்க் வேண்டும் என்று எந்த சி,இ.ஓ,டி,இ,ஓ சொல்லவில்லை.நீ தைதை என் குதிப்பதை விட்டு பொறுமையாக வேலைவாங்குவது உசிதம். முத்து பழ்னிசாகி இத்ற்கு முன்னர் பொருப்பில் இருந்த வ்ருவாய் மாவட்ட்த்த்ல் இதுமாதிரி தாருமாறாக் செய்து தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. ஆசிரியர்கலை மனம் கோனாமல் வழிநடத்து செல்வ்தே நல்ல நிர்வாக்ம். புண்பட்ட மன்சினால் எப்ப்டி வேலை செய்ய் முடியும். நல்ல மனிதர்.கோபத்தை யாருக்கா இப்ப்டி காட்டுவது.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive