Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிக்கலில் இடைநிலை ஆசிரியர்கள்

            அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பதவி உயர்வுக்கு முன்பே மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதால், இடைநிலை ஆசிரியர்கள் இடம்மாறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

             அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 6 முதல் 8 ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். அரசு உத்தரவுப்படி, 2003க்கு பின், இடைநிலை ஆசிரியர் ஓய்வு பெற்ற பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஜூன் 27 ல் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் மாறுதலும்; ஜூன் 28 ல் வெளிமாவட்டத்திற்கான மாறுதலும் நடக்க உள்ளது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் ஆவதற்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 28ல் நடக்கிறது. பதவி உயர்வுக்கு முன், இடமாறுதல் கலந்தாய்வு நடப்பதால், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஏற்படாது. ஆசிரியர்கள் கூறுகை யில், 'பட்டதாரி பதவி உயர்வுக்கு பின்பே காலிப்பணியிடங்கள் ஏற்படும். பதவி உயர்வுக்கு முன் இடமாறுதல் கலந்தாய்வு நடப்பதால், காலிப்பணியிடங்கள் ஏற்படாது' என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive