Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உபரி ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' விவகாரம் :ஆசிரியர் சங்க நிர்வாகிகள் போர்க்கொடி

               அரசு பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை, 'டிரான்ஸ்பர்' செய்ய, கல்வித்துறை எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிராக, ஆசிரியர்களும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

                      நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரப்படி, அரசு பள்ளிகளில், தற்போதுள்ள நிலைமையை ஆய்வு செய்து, உபரியாக உள்ள, 3,000 பட்டதாரி ஆசிரியர்களை, ஆசிரியர் தேவைஉள்ள பள்ளிகளுக்கு, பணியிட மாற்றம் செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 'இந்நடவடிக்கை, நியாயமானது; அதே நேரத்தில், அவசரகதியில், நடைமுறைப்படுத்த முயற்சிப்பது தான் தவறு' என, ஆசிரியர்களும், சங்க நிர்வாகிகளும் கொந்தளிக்கின்றனர். இது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றசங்க தலைவர், தியாகராஜன் கூறியதாவது:அரசு பள்ளிகளில், ஆகஸ்ட் வரை, மாணவர் சேர்க்கை நடக்கிறது. மாணவர் எண்ணிக்கை விவரம், ஆகஸ்ட் இறுதியில் தான் தெரியும். அதற்குள், இப்போதுள்ள மாணவர் எண்ணிக்கையை வைத்து, உபரி ஆசிரியரை, எப்படி கணக்கிட முடியும். மேலும், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாத நிலவரத்தின் அடிப்படையில், உபரி ஆசிரியரை கணக்கிடுவதாக, எங்களுக்கு தகவல்வருகிறது.

கடந்த, மே, 31ம் தேதி, அதிகளவில், ஆசிரியர் ஓய்வு பெற்றுள்ளனர்.இந்த தேதியில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் அடிப்படையிலும், ஆகஸ்ட் இறுதியில் உள்ள மாணவர் எண்ணிக்கை அடிப்படையிலும், உபரி ஆசிரியர் குறித்து, கணக்கெடுக்க வேண்டும். உபரி ஆசிரியரை, பணியிட மாற்றம் செய்வதில், தவறில்லை; இந்த நடவடிக்கையை, வரவேற்கிறோம். அதே நேரத்தில், முடிந்த அளவிற்கு, தற்போது பணிபுரியும் ஆசிரியருக்கு, பாதிப்பு வராத அளவிற்கு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தியாகராஜன் கூறினார்.எனினும், ஆசிரியர்களும், எப்போது, 'டிரான்ஸ்பர்' வருமோ என, அச்சத்தில் உள்ளனர்.

               இது குறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறியதாவது:நான்கு மாணவர்; ஐந்து மாணவர் குறைவாக இருந்தால், அதை ஒரு காரணமாக வைத்து, உபரி ஆசிரியர் என, கணக்கிட மாட்டோம். மாணவர், மிக மிக குறைவாக உள்ள பள்ளிகளில், ஆசிரியர் அதிகமாக இருந்தால், அவர்களைத் தான், வேறு பள்ளிகளுக்கு மாற்றுவோம்.இந்த விவகாரத்தில், இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதற்குள், ஆசிரியர்கள், தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.




4 Comments:

  1. Ubariyaga(excess) ulla tet passed candidates are crying..........

    ReplyDelete
  2. This year 40 ubari b.ed colleges are emerging in Tamil nadu.

    ReplyDelete
  3. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய அறிவியல் (SCIENTIFIC METHOD) அடிப்படையிலான வெயிட்டேஜ் முறை சில தினங்களில் அறிவிப்பு. +2, UG, BEd, and TET மதிப்பெண்களுக்கு சமமான வெயிட்டேஜ் வழங்கும் வகையிலான முறையில் மேற்கூறிய நான்கிற்கும் தலா 25….. (25+25+25+25=100)மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.கட் ஆப் மதிப்பெண்கள் இரு தசமத்திருத்தமாக 100 க்கு நிர்ணயிக்கப்படும். TET ஒரு தகுதித் தேர்வு என்பதாலும் UG & B.Ed ஆகியவையே ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி என்பதாலும் TET-ற்கான வெயிட்டேஜ் 60-ல் இருந்து 25- ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (TET தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இப்புதிய முறை எதிராக அமையும். தொடர்ச்சியாக நன்றாக படித்தவர்களுக்கு பாதிப்பில்லை)
    உதாரணம்:

    +2+UG+ BEd+TET =100 for PAPER II ------(25+25+25+25=100)

    10+12+ DTEd+TET =100 for PAPER I------(25+25+25+25=100)
    பெற்ற மதிப்பெண்கள்
    +2 = 960 MARKS =80%
    UG= 70 %
    B.Ed= 80%
    TET=90 MARKS =60%உங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    +2 = 20 (25)
    UG= 17.5 (25)
    B.Ed= 20 (25)
    TET=15 (25)
    மொத்தம் = 72.5/100

    ReplyDelete
  4. Ubari asiriyarkal nu avangalai vache postings fill up panikita namma tet passed candidates nilamai enna? Ethuvume puriala..

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive