Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் வெளியீடு தாமதம்

         பிளஸ் 1 வகுப்பு, வரும் 16ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், தரம் உயர்த்தப்பட உள்ள, மேல்நிலை பள்ளிகளின் பட்டியல் குறித்த, அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாததால், மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

         கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ், வரும் 12-ம் தேதி வழங்கப்படுகிறது. தனியார், மெட்ரிக்., அரசு உதவி பெறும் பள்ளிகள், பிளஸ் 1 சேர்க்கையை, ஆன்-லைன் மதிப்பெண் பட்டியலை வைத்து ஏற்கனவே நிரப்பி விட்டன. 400-க்கு கீழே மதிப்பெண் பெற்றவர்கள், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை நாடி வருகின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில், 350- க்கு கீழே மதிப்பெண் பெற்றவர்களுக்கு, ஒரு சில பிரிவுகளில் இடமில்லை, என்று கூறப்படுகிறது. இதனால், அவர்கள் அரசு பள்ளியையே நாடி வருகின்றனர். ஆனால், உயர்நிலை பள்ளியிலிருந்து, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட வேண்டிய, பள்ளிகளின் பட்டியல், இதுவரை அரசால் வெளியிடப்படவில்லை. தேர்தல் உள்ளிட்டவையால், அதற்கான பூர்வாங்க பணிகளும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை, என கூறப்படுகிறது. பள்ளி தொடங்கிய பிறகு, தரம் உயர்த்துவது குறித்து, அறிவிப்பு வெளியிட்டால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட கூடும் என்பதால், பெற்றோர் அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க, தயக்கம் காட்டுவார்கள். உதவி பெறும் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் சேர விரும்பும்போது, அவர்களுக்கு பண விரையமும் ஏற்படும். இன்னும் ஓரிரு நாட்களில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடக்க உள்ளது. அதற்குள்ளாவது, தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive