Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககத்திற்கு வேண்டுகோள்!


*அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மாநிலம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் பந்தாடப்பட்டிருக்கும் பேரவலம் ஆரோக்கியமான அம்சம் அல்ல; கவலை அளிக்ககூடிய, துரதிருஷ்ட வசமான நடவடிக்கையாகும் இது.

* மூன்றாண்டு வரையறை ஆசிரியர் பயிற்றுனர்களுக்குமட்டும் பொருத்திப் பார்த்து ஈவு இரக்கமற்ற வகையில்பந்தாடப்பட்டுள்ளனர்.ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு ஆசிரியர்களுக்குரிய மாறுதல் நெறிமுறைகள் பின் பற்றப் படவேண்டும்.

* இந்த மூன்றாண்டு வரையறை தமிழ்நாடு அரசின் அனைத்து துறை உயர் அலுவலர்கள் முதல் கீழ்மட்ட அலுவலர்கள் வரையில் தமிழக அரசு பொருத்திப் பார்க்கத் தயாராகி விட்டது என்பதற்கான சோதனை முயற்சியின் ஆய்வுக் களமாக அனைவருக்கும் கல்வித் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறதோ?எனும் ஐயப்பாடு எழுந்துள்ளது.

*ஆசிரியர் பயிற்றுனர்களின் பேரவலத்தைச் சகித்துக் கொள்ளவும், பார்வையாளராக நின்று வேடிக்கை பார்க்கவும் தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசு ஊழியர் இயக்கங்கள் தயாராக இருக்காது என்பதை அனைவருக்கும் கல்வித் திட்டம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

*தமிழ்நாட்டின் ஆரம்பக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் தளத்தில் காணப்படும் கட்டமைப்புக் குறைபாடுகள் உள்ளிட்டு பல்வேறு வகையான ஆலோசனைகள், ஐயங்கள்,கோரிக்கைகள், மனக்குமுறல்களை யெல்லாம் ஆசிரியர்கள் கொட்டித் தீர்த்த காலங்களிலெல்லாம் ஆசிரியரோடு சமரிட்டும், சமாதானம் செய்தும் ,மௌன சாட்சியாக நின்று அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் பலா பலன்களை மிகைபடுத்தி எடுத்துரைத்தும், பலவீனங்கள், குறைபாடுகள் ஏதுமே இல்லாத அற்புதமான திட்டம் எங்களது அனைவருக்கும் கல்வித் திட்ட மே என்று எல்லா உயர் மட்ட அதிகாரிகளுக்காகவும் வக்காலத்து வாங்கிக் கொண்டு களப் பணியாற்றிய ஆசிரியர் பயிற்றுனர்களின் மீது சிறு துளி பச்சாதாபம் கூட இன்றி மிக மிக மோசமாக நடத்தி இருப்பது கொடும் செயலாகும்.இந்த கொடும் செயலைக் கேள்விப்படும் பொழுது மனதிலும் , உடம்பிலும் பெரும் அதிர்வலைகள்ஏற்படுகிறது.

*வரலாற்றின் பக்கங்களில் மத அழிப்பு, மொழி அழிப்பு, ஜனநாயகப் படுகொலை, இனப்படுகொலை போன்றவற்றை காண்கிறோம். அது போன்று தமிழ் நாட்டின் கல்வி வரலாற்றில் ஆசிரியர் பயிறுனர்கள் நடத்தப் பட்டிருக்கிற விதமும் வருங்காலவரலாற்றில் பதிவு செய்யப்படாமல் இருக்கப்படுவதற்கு என்னென்ன வழிவகைகள் மேற்கொள்ளப் ப ட வேண்டுமோ அத்தகு திசை வழி நோக்கிஅனைவருக்கும் கல்வித்திட்டம்பயணம் தொடர வேண்டும்.

இதுவே தமிழ்கூறும் நல் உலகத்தின் வேண்டுகோளில் ஒன்றாகும்.




6 Comments:

  1. Kandanathirkkuriyadhu...

    ReplyDelete
  2. engal knneer ku kadavul padil solatum

    ReplyDelete
  3. engalin kannerukum kadavulin thandanaikkum ssa pathil sollatum.

    ReplyDelete
  4. Enga potalum velaikku poganum

    ReplyDelete
  5. Ethanai per velai kidakkavillai endru varuthappatukkondirukkumpothu ungalukku transfer oru kastama

    ReplyDelete
  6. A BRT can know the working place well so that he carry his duties better than a new staff. After a long strangle he or she may come to near by place to cake of their children also. The three year term can be other dept. to avoid domination and corruption if any, Govt. should think ane more time before proceeding

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive