Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பு

      ஒரு மாதத்தில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,144 குறைந்தது மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பு

        சென்னையில் தங்கத்தின் விலை ஒரு மாதத்தில் 2 ஆயிரத்து 144 குறைந்து, ஒரு பவுன் தங்கம் 20 ஆயிரத்து 440–க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
 
        நரேந்திர மோடி பதவி ஏற்பு இந்தியாவின் 15–வது பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்றுள்ள சூழ்நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வதை விட நிறுவனங்களில் முதலீடு செய்தால் பொருளாதார வளர்ச்சி காரணமாக அதிக அளவில் லாபம் கிடைக்கும் என்று கருதி மொத்தமாக தங்கத்தை வாங்கும் நிலை குறைந்து, அணிகலன்களுக்காக மட்டுமே தங்கத்தை வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

               இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த மே மாதம் 5–ந் தேதி ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 823 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுடன் கடந்த ஒரு மாத காலத்தில் 268 ரூபாய் குறைந்து நேற்று ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 555 ரூபாய்க்கு விற்பனையானது.
படஜெட்டுக்கு பின் மேலும் விலை குறையும்
 
         அதன்படி, கடந்த மே மாதம் 5–ந் தேதி 22 ஆயிரத்து 584 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பவுன் தங்கம், பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன், கடந்த ஒரு மாத காலத்தில் 2 ஆயிரத்து 144 ரூபாய் குறைந்து ஒரு பவுன் தங்கம் நேற்று 20 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையானது.
          தற்போது தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 சதவீதமாக இருந்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் இந்த இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்படும் என்றும், இதனால் பட்ஜெட்டுக்கு பின் தங்கத்தின் விலை மேலும் குறையும் என்றும் தங்க வியாபாரிகள் கருதுகிறார்கள்.

இறக்குமதியில் 20% ஏற்றுமதி
 
         இது குறித்து, தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் முதன்மை ஆலோசகர் எல்.கே.எஸ். செய்யது அகமது கூறியதாவது:–
தற்போது, சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு நிலைத்தன்மை பெற்றுள்ளதாலும், பங்குச்சந்தையில் வளர்ச்சி காணப்படுவதாலும் தங்கத்தின் விலை குறைந்து உள்ளது. மேலும் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு, தங்க நகை கொள்கையில் மாற்றம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

           அதாவது, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைப்பு, எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தங்கம் இறக்குமதியில் 20 சதவீதத்தை நகையாக செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கொள்கையை நீக்குவது போன்றவற்றை புதிய அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் தங்கத்தின் வரவு அதிகரிக்கும்.

தங்கம் வாங்குவதற்கான நேரம்
 
         மேலும் முந்தைய அரசு தங்கம் இறக்குமதி செய்வதற்கு குறிப்பிட்ட சில வங்கிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்தது. ஆனால் தற்போது புதிய அரசு அமைந்ததும், ரிசர்வ் வங்கி, தங்கம் வாங்குவதற்கு மேலும் அதிகமான வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால் தற்போது தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது.
            மேலும் தற்போது தங்கம் விற்பனைக்கான சீசன் இல்லை. ஆனால் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று ஏற்கனவே அதிக அளவில் கொள்முதல் செய்து வைத்திருந்த வியாபாரிகள் மேலும் விலை குறையலாம் என்ற நோக்கத்தில் தற்போது அதிக அளவில் தங்கத்தை விற்பனை செய்ய முன் வந்துள்ளனர். ஆனால், அதற்கு ஏற்ப தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை இல்லை என்பதால் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. எனினும் இது தங்கம் வாங்குவதற்கான காலம் என்றாலும், முதலீட்டு நோக்கத்தில் தங்கம் வாங்குவதற்கு உகந்த நேரம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive