Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணி ஓய்வு பெறுபவர்களுக்குமத்திய அரசு புது திட்டம்.

       அரசு ஊழியர்கள், பணியிலிருந்து ஓய்வுபெறும்நாளிலேயே, ஓய்வூதியம் வழங்குவது குறித்த அரசாணையை, ஊழியர்கள் பெறும் வகையில், புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
          இதுகுறித்து, மத்திய பணியாளர் நலன் மற்றும் குறைதீர் துறை இணைஅமைச்சர், ஜிதேந்திரா சிங் கூறியதாவது:அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் தாமதம் ஏற்படாமல் இருக்க, அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளில், 'பென்ஷன் பேமென்ட் ஆர்டர்' எனப்படும், ஓய்வூதியம் குறித்த அரசாணையை, ஊழியர்கள் கையில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

              மேலும், ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் பலன்களை தாமதம் இல்லாமல் வழங்க, இணையதள முறையில், ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் அதை சரிபார்க்கும், 'பவிஷ்யா' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; இதன் மூலம், லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன் அடைவர்.மாநில அரசு ஊழியர்களும் பயன்பெறும் வகையில், இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் விரிவுபடுத்துவது குறித்து, மாநில அரசு அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive