Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி ஜம்மு- காஷ்மீர் முதல்வர் உத்தரவு

           அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 என்பதில் இருந்து மாற்றி பிற மாநிலங்களில் உள்ளது போல் 60 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்த மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
 
         நேற்று மீண்டும் முதல் மந்திரி உமர் அப்துல்லாவை அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் சந்தித்து தங்களது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர். இது தொடர்பாக மந்திரிசபையில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், நேற்று நடந்த கேபினட் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின்னர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி உத்தரவிட்டார்.
 
              இதேபோல், அரசு பணியில் சேருபவர்களுக்கான வயது உச்சவரம்பும் 37-லிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த இரு உத்தரவும் ஜுன் முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருவதாகவும் ஜம்மு- காஷ்மீர் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive