Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த 5-ம் வகுப்பு மாணவன் சாவு

      நாமக்கல்லில் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் எஸ்.பி. புதூரில் அரசு நிதி உதவி பெறும் அர்த்தனாரி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோகன் (வயது 10), நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தான். இறை வழிபாடு முடிந்தவுடன் வகுப்புக்கு சென்று உட்கார்ந்த மோகன் பாடங்களை எழுதிக்கொண்டு இருந்தான்.

          அப்போது திடீரென அவன் மயக்கம் அடைந்து விழுந்தான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் அவனை மீட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நாமக்கல் அருகே எம்.ராசாம்பாளையத்தில் வசித்து வரும் அந்த மாணவனின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
பரிதாப சாவு
 
        இதற்கிடையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற மாணவனை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவன் உடல்நலக்குறைவால் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவனின் தாய் ஜோதி மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து மாணவனின் உடலை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
 
          இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகே மாணவனின் சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறினர். இந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive