![](http://1.bp.blogspot.com/-qX99IznHqsk/U5ZZYVJBP0I/AAAAAAAAEHI/fJ2L_GwoSx4/s320/10_06_2014_007_003.jpg)
குரூப் 4, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை, சென்னையில் நடக்கும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
அறிவிப்பு
விவரம்: கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட
பணியிடங்களில், 3,704 இடங்களை நிரப்ப, குரூப் 4 போட்டித் தேர்வு
நடத்தப்பட்டது. இதில், 3,523 பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டன.மீதம் உள்ள,
181 பணியிடங்களை நிரப்ப, வரும், 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை,
சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு
நடக்கிறது. இதில், பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரரின் விவரம்,
தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது.
சம்பந்தபட்ட விண்ணப்பதாரர், உரிய சான்றிதழ்களுடன், கலந்தாய்வில் பங்கேற்க
வேண்டும். முதலில், சான்றிதழ் சரிபார்ப்பும், பின், தகுதி இருந்தால்
கலந்தாய்வுக்கும் அனுமதிக்கப்படுவர். இட ஒதுக்கீடு அடிப்படையில்,
காலியாக உள்ள இடங்களில், தகுதியானவர்கள் நியமிக்கப்படுவர்.இவ்வாறு,
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
Already gr4 counselling mudithavargal line la vanga sir, sila doubt clear pannikkanum pls
ReplyDeletealready counselling mudinjavangaluku epa posting??
ReplyDeleteCouncelling mudichavangalukku avanga dept la irundhu joining order varum...
ReplyDelete