Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1800 அரசுப்பள்ளிகள் தரம் உயர்வு:ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் தொய்வு

       தமிழகத்தில் 2015ம் ஆண்டுக்குள் 1800 அரசு நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் என்ற அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இலக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
 
          'இத்திட்டத்தின் கீழ் (ஆர்.எம். எஸ்.ஏ.,) 5 கி.மீ.,க்கு ஒரு உயர்நிலைப் பள்ளி என்ற அடிப்படையில் 2015க்குள் தமிழகம் முழுவதும் 1800க்கும் மேற்பட்ட அரசு நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2009-10ல் 200; 2011-12ல் 345; 2012-13ல் 710; கடந்த ஆண்டு 50 பள்ளிகள் என, 1,300 பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில் இலக்கு நிறைவேறுமா என சந்தேகம் எழுந்துஉள்ளது. இதற்கான நடவடிக்கை தொய்வாக இருக்கிறது என ஆசிரியர்கள் சங்கங்கள் கூறுகின்றன.சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் இத்திட்டத்திற்கான நிதியை அதிகரித்து, கல்வியை ஊக்குவிக்க வேண்டும். ஏற்கனவே அறிவித்தப்படி 2015க்குள் 1800க்கும் மேற்பட்ட பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive