Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியரெல்லாம் நொந்து இருக்காங்க...தினமலர் டீக்கடை பெஞ்ச்

ரெண்டு அமைச்சர்களும் நழுவியதால, ஆசிரியரெல்லாம் நொந்து போயிருக்காங்க பா...'' எனக் கூறியபடியே, பெஞ்சில் வந்தமர்ந்தார் அன்வர்பாய்.
''அமைச்சருங்க யாரு... ரகசிய துாது எதுக்காமுங்க...'' என, கேட்டார் அந்தோணிசாமி.''கன்னியாகுமரி மாவட்டத்தில, பிளஸ் 2 தேர்ச்சி குறைஞ்சிடுச்சுன்னு, 'டென்ஷன்' ஆன கல்வி துறை அதிகாரி, இரணியல், பந்தலுமூடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருங்களை சஸ்பெண்ட் செஞ்சுட்டாரு... பளுகல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை, திடீர்ன்னு பொறுப்பிலிருந்து விடுவிச்சுட்டாரு...

பாடங்கள்ல தேர்ச்சிவிகிதம் குறைஞ்சிடுச்சுன்னு, பன்னெண்டு ஆசிரியர்களுக்கு, விளக்க கடுதாசி அனுப்பிட்டாரு... இதனால, ஆசிரியர்களும், 'டென்ஷன்'ல இருக்காங்க...இவங்க, ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் தகவலை சொல்ல, எல்லாருமா சேர்ந்து, உள்ளூர்ல இருந்த அமைச்சர் பச்சைமாலை சந்தித்து குமுறியிருக்காங்க... ஆசிரியருங்க பற்றாக்குறை, படிக்காத மாணவருங்களை கண்டிச்சா ஏற்படும் பிரச்னை, அரசின் வேறு திட்டங்களுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துறதுன்னு, எல்லா பிரச்னைகளும் சொல்லி இருக்காங்க...''ஆனா, தேர்தல் முடிவு தெரியாத டென்ஷனில் இருந்த அமைச்சர், 'ஏற்கனவே பிரச்னை...இப்ப இது வேறயா... சரி, நான் பாத்துக்கிறேன்'ன்னு சொல்லி, எல்லாரையும் அனுப்பிச்சு வச்சிட்டாரு... ஆனா, இதுவரைக்கும், யாரிடமும் பேசலே...''ஆசிரியர்கள் சங்கங்களின் முக்கிய நிர்வாகிங்க, பள்ளி கல்வி துறை அமைச்சர் வீரமணிக்கு விவரத்தை தெரிவிச்சாங்க... ஆனா, அவரும் வாயே திறக்கலியாம்... ஆசிரியரெல்லாம் நொந்து இருக்காங்க பா...'' எனக் கூறி முடித்தார் அன்வர்பாய்.




13 Comments:

  1. தனியார்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கும், அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவதற்கும் கரணங்கள் நிறைய உண்டு ! தனியார்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பாடங்களையும், பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களையும் முறையே ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினோறாம் வகுப்புகளிலேயே தொடங்கி விடுகிறார்கள். இத்தகைய பள்ளிகளில் கல்லூரிகளில் இருந்து விரிவுரையாளர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. மேலும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை விட, பாடங்களை மனனம் செய்து " டெஸ்ட் " எழுதுதலே இத்தகைய தனியார் பள்ளிகள் செய்யும் கற்பித்தல் யுத்தியாகும் !

    இத்தகைய தனியார்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தலையாய பணி டெஸ்ட் பேப்பர்களைத் திருத்துதல் மட்டுமே ! மாணவர்களின் தலையாய பணி, கண்ணை மூடிக் கொண்டு உருப்போட்டு, படித்ததையெல்லாம் டெஸ்ட் பேப்பரில் " வாந்தியெடுத்தல் " மட்டுமே !
    இதையெல்லாம் எந்த அதிகாரியும் எந்த மாண்புமிகு அமைச்சர்களும் கண்டுகொள்வதே இல்லை !

    தனியார்பள்ளிகளில், மாணவர்களை அடிப்பதற்காகவே சிறப்பு நிர்வாகிகள் இருக்கிறார்கள். அதோடு மாணவர்களின் பெற்றோர்களும் தமது பிள்ளை படிக்கவில்லையென்றால் " நன்றாக அடியுங்கள் " என்று சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு பச்சைக்கொடி காட்டி விட, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு வயதுவந்த மாணவியைக்கூட கன்னம் கன்னமாக அறையும் சீரிய திறன் கொண்ட பள்ளி நிர்வாகிகள் இங்குண்டு !

    ஆனால், ஒரு அரசுப்பள்ளியில் இதுபோன்ற குறுக்கு வழிகள் கிடையாது. பதினோறாம் வகுப்பு என்றால் அந்த வகுப்பிற்குரிய பாடம் மட்டுமே அந்த நடப்புக் கல்வியாண்டில் போதிக்கப்படுகின்றது. மேலும் எந்த ஆசிரியராவது எந்த மாணவனையாவது தப்பித்தவறி கைநீட்டி விட்டால், அவ்வளவுதான் ! ஒரு சமுதாயமே கொந்தளித்து எழுந்து அந்த ஆசிரியருக்கு எதிராகப் போராடலாம் ! மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியரை வஞ்சம் வைத்துப் பழிதீர்க்கும் உயர்ந்த"' விழுமநிலையில் " உள்ள மாணவர்களும் இங்குண்டு ! இதையும் மாண்புமிகு அமைச்சர்கள் கருத்தில் கொண்டால் நலமாக அமையும் !

    அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை தண்டிக்கும் அரசு இயந்திரம், இதே தண்டிப்பை அனைத்துத் துறை அதிகாரிகளிடமும் காட்டுகிறதா ?

    வேளாண்துறை அமைச்சர் என்று ஒருவர இருக்கிறார். நாட்டில் வேளாண்மை குறைந்துவிட்டதென்று யாராவது அவர் மீதும் அவருக்குக் கீழ் இயங்கும் அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியுமா ?

    இதே போன்றுதான் நாட்டில் எண்ணற்ற துறைகள் உள்ளன. அவற்றில் எண்ணற்ற குளறுபடிகள் நடக்கின்றன. அதற்காக ஒட்டுமொத்தமாக அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க முடியுமா ?

    ஒரு சமுதாயத்தை ஆசிரியர் என்பவர்தான் உருவாக்குகிறார் ! ஆசிரியரை இழிவுபடுத்தும் சமுதாயம் உருப்படாது ! உருப்படவும் வேண்டாம் !
    இதை உணர்ந்து அரசு இயந்திரம் செயல்பட வேண்டும். மேலும் குறிப்பாக நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் ! அத்தகைய நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு போதிய ஊதியமும், போதிய மரியாதையும், சுமையில்லாத பணிச்சூழலும் கிடைத்திட வழிவகை செய்தால் நலமாக அமையும் !

    ReplyDelete
    Replies
    1. Ennudaya aathangamum ithuthan sir

      Delete
  2. I govt.schools all kinds of students are admitted i.e.slow learners, low scorers etc, whereas in private and matric.schools,only high scorers are admitted....

    ReplyDelete
  3. vettriarasan5/17/2014 3:53 pm

    60 சத்வீதம் குறைந்த தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ள பள்ளி த.ஆ பணிநீக்கம் செய்த மு.க.அ அவர்களை முத்லில் பணிநீக்கம் செய்தும் , பள்ளி இயக்குனருக்கு மெமோ கொடுத்து விளக்கமும் அம்மா கேட்டு பின்னர்தான் த.ஆ பணிநீக்கம் செய்ய்வேண்டும். இதோடு மட்டுமின்றி வாக்காளர் பணி, டி.டி.சி, டின்.பி.எஸ்.ஸி தேர்வு நடத்திய த.ஆ ரை கல்விப்பணி பாதிக்கும் வகையில் வேலை வாங்கிய மாவட்ட ஆட்சியர் வருவாய் துறை, அரசில் 14 திட்டத்தைமட்டுமே கருத்தில் கொண்டு மன அழுத்த்தை ஏற்படுத்தி க்ல்விக்கடமை ஆற்றாமல் விடுத்த நலத்திட்ட இயக்குனர் மற்றும் சம்பந்தப்ப்ட்ட் அனைத்து துறை மேலதிகாரிகளுக்கு சேர்ந்து பணிநீக்கம் செய்தால் தான் இதற்கான் சரியான் தீர்வு கிடைக்கும். என்வே த.அ நன்றாக் பிழிந்து வேலை வாங்கிவிட்டு செருப்பு காலள்வு எடுக்கும் அளவுக்கு அவமதித்து இவ்வாறு செய்வது அரசியல் வாதிக்கு போடும் சலாம் ஆக த்ன்னலப்போக்ககாக அதிகாரிகள் நாற்காலியில் நிரந்தரமாக அமர போடும் நாடமாகிறது.

    ReplyDelete
    Replies
    1. Corrrect sir...result kammi aanathukku..education departmentla high levella irunthu action yedukkanum...adha vittuttu HM mela mattum action yedukkarathu thappu sir...

      Delete
  4. In most of the private school there is no admission fot students having less than 475

    ReplyDelete
  5. All private schools getting work by teacher through forcing so results well and teachers likes to protect their work


    ReplyDelete
  6. Injustice to teachers. Community

    ReplyDelete
  7. Please make arrangements to send the comments in tamil as Dinamakar, pudhia thalaimurai etc have done.

    ReplyDelete
  8. ஆசிரியர்களின் நேரம் தற்போது சரியாக இல்லை என்ன பன்றது தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் தொழிற்சாலை யில் பணி புரிவது போல பணி .450 மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மட்டுமே தனியார் பள்ளியில் +1 சேர்த்துக்கொள்ளபடுகிறார்கள். முதல்வன் படத்தில் வருவதுபோல ஒரு கல்வி ஆண்டு தனியார் பள்ளி ஆசிரியர்கள் அரசு பள்ளியில் பணிபுரிந்து 100%தேர்ச்சியையும் 100 மாணவர்களை மாநிலத்தில் முதல்மதிபெண் எடுக்க வைக்கமுடியுமா என்றால் முடியாது. காரணம் அரசு பள்ளியில் 3 வகையான மாணவர்கள் .தனியார்பள்ளியில் ஒரே வகையானமாணவர்கள் .

    ReplyDelete
  9. ஆசிரியர்களின் நேரம் தற்போது சரியாக இல்லை என்ன பன்றது தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் தொழிற்சாலை யில் பணி புரிவது போல பணி .450 மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மட்டுமே தனியார் பள்ளியில் +1 சேர்த்துக்கொள்ளபடுகிறார்கள். முதல்வன் படத்தில் வருவதுபோல ஒரு கல்வி ஆண்டு தனியார் பள்ளி ஆசிரியர்கள் அரசு பள்ளியில் பணிபுரிந்து 100%தேர்ச்சியையும் 100 மாணவர்களை மாநிலத்தில் முதல்மதிபெண் எடுக்க வைக்கமுடியுமா என்றால் முடியாது. காரணம் அரசு பள்ளியில் 3 வகையான மாணவர்கள் .தனியார்பள்ளியில் ஒரே வகையானமாணவர்கள் .

    ReplyDelete
  10. தண்டிக்கும் அதிகாரியின் அடிப்படைக்கல்வி தகுதி ஆசிரியரின் அடிப்படைக்கல்விதான் எனவே அவரே அவரது ஆளுமைக்குட்பட்ட பள்ளியில் அவரது முக்கிய (major subject) பாடத்தில் சதவீதம் குறைந்த பள்ளிக்கு அவரே ஆசிரியராக பணியாற்றி தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முயற்சி செய்தால் .........

    ReplyDelete
  11. வெற்றியரசன்5/18/2014 8:04 pm

    கணிதப்பாடம் உள்ள தொழிற்கல்வி இ.எம்.ஆர். பாடப்பிரிவில் 3 அல்லது 4 அட்டைகள் பெற்ற மாணவர்களைச் சேர்த்து இயக்குனரே பாடம் நடத்தினால் கூட 90% வாங்கமுடியாது.கேள்வித்தாளை கொடுத்து எழுத சொன்னாலும் கூட முடியாது. இது எல்லாம் கிராமபுறமாணவர்களுக்குத் தான் பொருந்தும். அரசியல் வாதி இந்த மாதிரி பையனை எனஜியர் ஆக்குற என்று பணம் பெற்றுக்கொண்டு பள்ளியில் அவர் கெளரத்திற்காக நிர்பந்தப்படுத்தி சேர்த்து ஆசிரியர்களையும் த.ஆ ரையும் தேர்ச்சி விழுக்காடு குறைய செய்து கல்வித்துறையால் மானபங்கப்படுத்துகிறார்கள்.இது 100 க்கு 100 உண்மை. இது தவறு என எந்த அதிகாரியும் சொன்னா அந்த அதிகாரிக்கு களத்தில் என்ன நடக்கிறது என தெரியல என அர்த்தம். பாவம் ஆசிரியர்கல் நிலமை.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive