Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செவ்வாயை நோக்கிய பாதையில் பாதி தொலைவை கடந்த மங்கள்யான்


         செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பாதையில் மங்கள்யான் விண்கலம் பாதி தொலைவைக் கடந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம்(இஸ்ரோ) அறிவித்துள்ளது.

                                     

பாதி தொலைவான 33.7 கோடி கிலோமீட்டரை புதன்கிழமை (ஏப்ரல் 9) காலை 9.50 மணிக்கு மங்கள்யான் கடந்தது. இப்போது இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்துக்கும், மங்கள்யானுக்கும் தகவல் பரிமாற்றத்துக்கு 4 நிமிஷங்கள் 15 விநாடிகள் வரை தாமதம் ஆவதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மங்கள்யான் விண்கலம் இப்போது சீரான நிலையில் உள்ளது. அதில் உள்ள கருவிகளில் அவ்வப்போது சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால், அதன் பாதை மாற்றும் திட்டம் ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்படும். விண்கலம் மிக நீண்ட தொலைவு பயணித்துள்ளதால், தகவல் தொடர்புக்காக விரைவில் அதிலுள்ள சக்திவாய்ந்த ஆன்டெனாக்கள் இயக்கப்படும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதையில் டிசம்பர் 1-ஆம் தேதி செலுத்தப்பட்டது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive