Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்தல் விதிமுறைகள் மீறும் சத்துணவு மைய பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

              தேர்தல் விதிமுறைகள் மீறும் சத்துணவு மைய பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலையொட்டி சத்துணவு மைய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சந்திரசேகரன், இளம்பருதி, அன்னம்மாள் ஆகியோர் லோக்சபா தேர்தலையொட்டி சத்துணவு மைய பொறுப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினர்.
 
              சத்துணவு மையத்தில் அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்ய அனுமதிக்க கூடாது. பணியாளர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்தல், மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க கூடாது.
 
               கணவர், உறவினர் என யாருக்காவும் பிரசாரத்திற்காக விடுமுறை எடுக்கக்கூடாது, அலுவலக பொருட்களை தேர்தலுக்கு உபயோகத்திற்கு அளிக்க கூடாது. தேர்தல் பணி அளிக்கப்பட்டால் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். தேர்தல் முடிவும் வரை தலைமையிடத்தை விட்டு முன் அனுமதி பெறாமல் செல்லக்கூடாது. தேர்தல் விதிமுறைகளை மீறும் சத்துணவு மைய பொறுப்பாளர்கள் மீது ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் உள்ள சத்துணவு பணியாளர்கள் பணம் வாங்காமல் மனசாட்சியுடன் அனைவரையும் ஓட்டளிக்க வைக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கினால் சிறை தண்டனைக்குரிய குற்றம் என்பதை மக்களிடையே எடுத்துக்கூற வேண்டும்.

              மாவட்டத்தைச் சேர்ந்த 2,400 சத்துணவு மைய பொறுப்பாளர்கள் பங்கேற்றதால் 5 கட்டங்களாக விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. தேர்தல் தாசில்தார் சுந்தராஜன், கணக்கு அலுவலர் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive