Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்கான வயது வரம்பு நீட்டிப்பு

ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., தேர்வு எழுதும், அனைத்து பிரிவின் கீழ் உள்ள தேர்வர்களுக்கும் வயது வரம்பு, இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தேர்வு வாய்ப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.




ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பொது நுழைவுத் தேர்வு, வரும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு முதல் தேர்வு எழுதும் அனைத்து பிரிவினருக்கும், 2 ஆண்டு வயது வரம்பு மற்றும் கூடுதலாக, 2 முறை தேர்வு எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது.




தற்போதுள்ள நடைமுறைப்படி, பொதுப் பிரிவினர், நான்கு முறை இந்த தேர்வை எழுதலாம். அவர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆக உள்ளது. இனிமேல் அவர்கள், 32 வயது வரையிலும், ஆறு முறையும் தேர்வு எழுதலாம். ஓ.பி.சி., மாணவர்கள், இப்போது, ஏழு முறை தேர்வு எழுதி வந்த நிலையில், இனிமேல், ஒன்பது முறை தேர்வு எழுதலாம். அவர்களின் வயது வரம்பு 43ல் இருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.




பொதுப் பிரிவில் உள்ள மாற்றுத் திறனாளிகள், 42 வயது வரை தேர்வு எழுதலாம்; அவர்களுக்கும் இரண்டு ஆண்டு வயது வரம்பு நீட்டிக்கப் பட்டுள்ளது. எனினும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவில் உள்ள மாற்றுத் திறனாளிகள், தேர்வு எழுதும் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்படவில்லை. வயது வரம்பு, 45ல் இருந்து, 47 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.




எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள், எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். அவர்களின் அதிகபட்ச வயது இப்போது 35ல் இருந்து, 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., அமைப்பு நடத்தி வருகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive