Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனைத்து ஏழைப் பெண்களும் கல்வியறிவு பெற இந்தியாவிற்கு 56 ஆண்டுகள் தேவை - அறிக்கை

 
           இந்தியாவில் அதிகளவிலான ஏழை இளம் பெண்களுக்கு, கல்வி என்பது இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. எனவே, இந்த வகை இளம் பெண்களின் கல்வியில் ஒரு வளர்ச்சி நிலையை எட்ட, குறைந்தபட்சம் இன்னும் 56 ஆண்டுகள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

           இதுதொடர்பாக யுனெஸ்கோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கீழ் மத்தியதர மற்றும் அடிமட்ட பொருளாதார நிலை கொண்ட நாடுகளில், 10 கோடி இளம் பெண்கள், குறைந்தது ஒரு வார்த்தையைக் கூட படிக்க முடியாதவர்களாக உள்ளனர். மேலும், 3 கோடிக்கும் அதிகமான பெண் பிள்ளைகள், பள்ளியில் சேர்வதே இல்லை.

          தென்மேற்கு ஆசியாவைப் பொறுத்தவரை, ஆரம்பப் பள்ளிகளில் சில ஆண்டுகள் மட்டுமே செலவிட்ட பெண் பிள்ளைகளால், கல்வியறிவை வளர்த்துக்கொள்ள முடிவதில்லை. மேலும், தொடக்கக் கல்வியை முழுவதும் முடித்தால்கூட, அது கல்வியறிவிற்கான உத்தரவாதமாக இருப்பதில்லை.

       இந்தியாவைப் பொறுத்தவரை, பள்ளியில் 4 ஆண்டுகள் வரை செலவழித்தவர்களில் 90% பேர் கல்வியறிவற்றவர்களாகவே இருக்கிறார்கள் மற்றும் 5 முதல் 6 ஆண்டுகள் வரை கழித்தவர்களில் 30% வரை கல்வியறிவற்றவர்கள்.

           ஏழைப் பெண்கள் இதில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைப் பொறுத்தவரை, அந்த வகையினரில் மூன்றில் இரண்டு பெண்களால் எதையும் படிக்க முடிவதில்லை. இந்த அவல நிலையை போக்குவதற்கு, பூடான் நாட்டிற்கு 2083 வரை தேவைப்படும்.

            பாகிஸ்தான் 22ம் நூற்றாண்டு வரை இதற்கென எடுத்துக் கொள்ளுமாம். அதேசமயம், இந்தியாவிலும் நிலைமை மோசம்தான். நமக்கு ஏழைப் பெண்களின் கல்வியறிவு நிலையை முன்னேற்றும் இலக்கை பூர்த்திசெய்ய, 2070 அல்லது 2080ம் ஆண்டு வரை ஆகுமாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive