Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கடத்தல் ரூ.2.50 கோடி கேட்டு மிரட்டல்

       ஜோலார்பேட்டை அருகே, 2. 50 கோடி ரூபாய் கேட்டு, அரசு உதவி பள்ளி தலைமை ஆசிரியரை, மர்ம நபர்கள் கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

        வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் லங்கேஸ்வரன், 45. இவர், கொரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம், மாலை பள்ளி முடிந்து, ஏலரப்பட்டியில் உள்ள தன் நிலத்துக்கு, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
 
          தாமலேரி முத்தூர் கூட்டு ரோடில் சென்ற போது, அவரை வழிமறித்த, ஐந்து பேர் கொண்ட கும்பல், லங்கேஸ்வரனை கடத்தி சென்றது. நேற்று மாலை லங்கேஸ்வரனின் மனைவி ஆனந்தியை, மொபைல்ஃபோனில் தொடர்பு கொண்டு மர்மநபர்கள், "ஏலகிரி மலையில் உள்ள ஒரு மறைவிடத்தில், லங்கேஸ்வரனை மறைத்து வைத்துள்ளதாகவும், 2. 50 கோடி ரூபாய் பணம் கொடுத்தால், லங்கேஸ்வரனை விடுவிப்போம்' என, கூறி போனை துண்டித்தனர். அதிர்ச்சி அடைந்த ஆனந்தி, ஜோலார்பேட்டை போலீஸில் புகார் செய்தார். புகாரை வழக்குப்பதிவு செய்த போலீஸார், உதவி தலைமை ஆசிரியர் கடத்தப்பட்டது குறித்து விசாரித்து வருகின்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive