Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

OC பிரிவினர் பாதிக்காவண்ணம் இட ஒதுக்கீடு

          உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி எந்த மாநிலத்திலும் இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்ட கூடாது. அப்படி தாண்ட வேண்டி சட்ட திருத்தத்தை மாநில அரசு கொண்டு வந்தால், அதனால் oc பிரிவினர் பாதிக்காவண்ணம் சட்டம் இயற்ற உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்காக தமிழக அரசு 69% இட ஒதுக்கீடு கொடுக்கும் போது தர வரிசையில் 31 சதவிகிதத்தில் இருந்து  50 சதவிகிதத்திற்குள்  உள்ள oc பிரிவினருக்கு உபரியாக  பணி இடங்களை ( super   numeracy seats ) உருவாக்கி நியமனம் வழங்க வழி வகை செய்துள்ளது. இதன் G.O. இத்துடன் தரப்பட்டுள்ளது.







11 Comments:

  1. அவசரப்பட்டு விட்டாரா முதல்வர்?
    இடியாப்ப சிக்கலில் தவிக்கிறது டி.ஆர்.பி.,
    – தின மலர் நாளேடு

    ‘ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் தான், ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்’ என, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர். பி.,) வட்டாரம் தெரிவித்தது.

    டி.இ.டி., தொடர்பான, அரசின் அறிவிப்புகள் அனைத்தும், மாறி மாறி வருவதால், இந்த விவகாரத்தில், முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும், தங்களை, அரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதிய வர்களின் கேள்விக் கணைகளைச் சமாளிக்க முடியாமல், டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது.

    கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 27 ஆயிரம் பேரும், சமீபத்தில், முதல்வர் அறிவித்த, 5 சத
    வீத மதிப்பெண் சலுகையின் காரணமாக, 47 ஆயிரம் பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆயிரம் இடங்கள் மட் டுமே காலியாக உள்ள நிலையில், 74 ஆயிரம் பேர், தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது, பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது.

    ஏனெனில், தேர்ச்சி பெற்ற அனைவரும், அரசு வேலை கிடைக்கும் என்ற நம் பிக்கையில் உள்ளனர்.

    தற்போதுள்ள காலி இடங்களுக்கு, தேர்வு பெறுவோர் போக, மீதம் உள்ளவர்களுக்கு, அடுத்த பணி நியமனத்தின் போது, முன்னுரிமை கிடைக்கும் என, தேர்வர்கள், எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால், இதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்கு, டி.ஆர்.பி., முன்வரவில்லை.

    எனினும், இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: கடந்த, 2013 தேர்வில் தேர்ச்சி பெற்றோர், 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக தேர்ச்சி பெற்றோர் ஆகிய இரு தரப்பினரின் மதிப்பெண்களையும் மதிப்பீடு செய்து, இட ஒதுக்கீடு வாரியாக, அதிக மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர் மட்டுமே, ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவர்.

    தேர்வு பெறாதவர்கள், அடுத்த காலி பணியிடங்களை நிரப்பும்போது, முன்னுரிமை கோர முடியாது.

    அடுத்து, மீண்டும், டி.இ.டி., தேர்வு நடந்தால், அதில் தேர்ச்சி பெறுபவரின் மதிப்பெண் மற்றும் ஏற்கனேவ, 2013ல் தேர்ச்சி பெற்று, அரசு பணி கிடைக்காமல் காத்திருக்கும் விண்ணப்பதாரருடைய மதிப்பெண் ஆகிய இரண்டையும் கலந்து, அதில், அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதார‌ரே, அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவார்.
    இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகை
    ரத்து செய்யக் கோரி வழக்கு
    ஐகோர்ட் நோட்டீஸ்
    -‍ தின மலர் நாளேடு

    ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் பங்கேற்றவர்களுக்கு, 5 சதவீத மதிப்பெண்
    சலுகை வழங்கிய உத்தரவை, ரத்து செய்யக் கோரிய வழக்கில், டி.ஆர். பி., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐேகார்ட் கிளை உத்தரவிட்டது.

    திருச்சி தென்னுார் வின்சென்ட் தாக்கல் செய்த மனு:
    ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், 2012
    ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. நான் பங்கேற்றேன். மொத்தம் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 2012 அக்டோபரில் நடந்த தேர்வில், 11 சத
    வீதம் பேர் தேர்ச்சியைடந்தனர். பொதுப் பிரிவினரைத் தவிர, மற்ற
    சமூகத்தினருக்கு, தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி, தமிழக அரசு பிப்.,6 ல் உத்தரவிட்டது. இது, 2013 ல் தகுதித் தேர்வில்
    பங்கேற்றவர்களுக்கு மட்டும் பொருந்தும். இது ஒருதலைபபட்சமானது. நான் பிற்பட்ட வகுப்பினர். எனக்கு, 83 சதவீத மதிப்பெண் கிடைத்தது. எனக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால், தேர்ச்சியைடந்து
    விடுவேன். மதிப்பெண் சலுகை வழங்கிய, அரசின் உத்தரவை ரத்து செய்ய
    வேண்டும். 2012 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி எம்.எம்.சுந்தேரஸ் முன், விசாரைணக்கு மனு வந்தது. மனுதாரர் வக்கீல் வி.பன்னீர்செல்வம் ஆஜரானார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், டி.ஆர்.பி., தலைவர், துவக்கக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

    ReplyDelete
  4. YES. THIS G.O. IS VALID. BECAUSE AS PER SUPREME COURT DIRECTION THE STATE GOVT. SHOULD NOT GRANT MORE THAN 50% RESERVATION. BUT TN GOVT RIGHTLY PASSED THIS G.O. TO PROTECT THE INTEREST OF THOSE OC CANDIDATES IN TOP 50 RANKINGS. SINCE THESE SEATS WERE CREATED IN EXCESS OF DECLARED VANCANCIES, THE EXTISTING 69% RESERVATION WILL NOT GET AFFECTED. PLEASE ENSURE THAT THIS SYSTEM IS FOLLOWED IN ALL POSTINGS AND COUNSELLINGS.

    ReplyDelete
  5. IDU NALLATHORU THITTAM. THARPOTHU NADAIMURAIYIL ULLA IDA ODUKEEDUM PADHIKKADHU. ATHE SAMAYAM OC PIRIVINARUKKUM ORU VAAIPPU. KANDIPAGA NADAIMURAI PADUTHAVUM, PLEASE.

    ReplyDelete
  6. please contact tet2012 82-89 mark candidate for further action cell 9842366268

    ReplyDelete
  7. plz plz yaravathu theliva solunga ennakku intha g.o puriyala

    ReplyDelete
  8. Please clarify what does OC means? is it Open Category or Other Caste (FC).

    ReplyDelete
  9. HELLO ALWIN & MOHAN SIR, OC HERE MEANS "NON-RESERVED CANDIDATES". THIS RULE IS VERY CLEAR, ALL NON-RESERVED CANDIDATES IN RANKINGS FROM 31% TO 50% SHOULD BE ALLOTED SEATS BY CREATING EXTRA SEATS. THUS THE EXISTING 69% RESERVATION WILL NOT BE AFFECTED. HENCE ALL NON-RESERVED CANDIDATES SHOULD FORCE THE GOVT. TO FOLLOW THIS SYSTEM IN ALL POSTINGS AND COUNSELLINGS.

    ReplyDelete
  10. I AM OC CONTACT FURTHER ACTION 9994355238
    VENKATESH, SANKAR, ALWIN THOMAS, MOHAN RAMDAS
    YOUR CELL NUMBER PLEASE

    ReplyDelete
  11. I AM OC CONTACT FURTHER ACTION 9994355238
    VENKATESH, SANKAR, ALWIN THOMAS, MOHAN RAMDAS
    YOUR CELL NUMBER PLEASE

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive