Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவரை போல், ஆசிரியர்களை நிற்க வைத்து தண்டனை : தேர்வுத் துறை தடாலடி நடவடிக்கை


           பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விபரங்களை சரிவர பூர்த்தி செய்யாத ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களை, நேற்று, இயக்குனரகத்திற்கு வரவழைத்து, நீண்ட நேரம் நிற்க வைத்து, தேர்வுத் துறை, தண்டனை அளித்தது.
 
           "பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் முழுமையான விபரங்களை, ஒரு படிவத்தில் பூர்த்தி செய்து, அந்த விபரங்கள் சரியானவை; உண்மையானவை என, சம்பந்தபட்ட மாணவர், வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் மாணவரின் பெற்றோர் ஆகிய, நான்கு பேரும் கையெழுத்திட வேண்டும்' என, தேர்வுத்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, பூர்த்தி செய்த படிவங்கள் பெறப்பட்டன. இதில், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், பிளஸ் 2 படிவங்கள், சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை. மாணவர்களின் புகைப்படத்தை மாற்றி ஒட்டியது, பிறந்த தேதியை தவறாக பதிவு செய்தது உள்ளிட்ட பல தவறுகளை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், சம்பந்தபட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் ஆகிய இருவரையும், நேற்று, தேர்வுத்துறை இயக்குனர், சென்னைக்கு அழைத்தார்.ஆசிரியர் அனைவரிடமும், எந்தவித விசாரணையும் நடத்தாமல், பல மணி நேரம், அப்படியே காத்திருக்க வைத்து, தேர்வுத்துறை, நூதன தண்டனை வழங்கியதாக கூறப்படுகிறது.

             மாணவர் தவறு செய்தால், வகுப்பிற்கு வெளியே நிற்கவைத்து தண்டனை வழங்குவது, ஆசிரியர்களின் வழக்கம். அதுபோல், ஆசிரியர்களையே, மணிக்கணக்கில், இயக்குனரகத்தில் நிற்கவைத்து, நூதன தண்டனை அளித்ததை நினைத்து, ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர், பாலகிருஷ்ணன் கூறுகையில், ""தேர்வுத்துறையின் நடவடிக்கை, அதிர்ச்சி அளிக்கிறது. ஆசிரியர்களிடம், உரிய விசாரணையை நடத்தி, அனுப்பி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, மாணவர்களைப் போல், நீண்டநேரம் நிற்கவைத்து, தண்டனை அளித்திருப்பது, மிகவும் கொடுமை. இதுபோன்ற போக்கை, தேர்வுத்துறை கைவிட வேண்டும்,'' என்றார்




1 Comments:

  1. ஒரு குருவைப் போல இருப்பவரை இப்ப்டி வேண்டுமென செய்திருந்தால் அந்த அதிகாரியை செரு.... அடிக்க வேண்டும்; இவர்கள் செய்தால் மட்டும் சரியா? சென்ற ஆண்டு 10ஆம் வகுப்புக்கான் பொதுத்தேர்விற்கு தழிழ் இரண்டாம் தாளில் வங்கி சலான் வினாவை கேட்டுவிட்டு அதற்கான் சலான் மாநிலம் முழுவதும் வைக்கவில்லை.தரவில்லை.தொலைப்பேசியதில் அணுகியதற்கு நிருப்ர்களுக்கு சொல்லாம்ல் மாண்வர்களுகு தேர்வு எழுதும் போதே அந்த எண்னை எழுதுமாறு தேர்வுத்துறை அறிவித்து மாவட்ட அதிகாரிகள் மூலமாக் அனைத்து மைய்த்திற்கும் அறிவிக்க சொல்லி அறிவித்தது யார்? அதற்கு தேர்வுத்துறையோ அல்லது கல்வித்துறை அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கிவிட்டீர்களா? நிற்க வைத்தீர்களா? அதிகாரிக்கு ஒரு நியாய்ம். ஆசிரியருக்கு ஒரு நியாமா? த்ப்புக்கு தலைகுனிந்து 5 மார்க் அனைவருக்கும் இனாமாக அளித்தது சென்ற ஆண்டு நடந்தவிஷயம். ஆசிரியரை பகைத்ததால் அரசே கவிழ்ந்த கால்ங்கள் உண்டு. அதிகாரிகள் செய்யும் அசட்டையால் அரசுக்கு பங்கம் விளைவிக்கிறது.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive