Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை டி.இ.ஓ.,வாக நியமிக்க வலியுறுத்தல்


           மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு, (டி.இ.ஓ.,), உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
        தமிழகத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களில், 25 சதவீதம் நேரடி தேர்வு மூலமும், 75 சதவீதம் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது. கடந்த காலங்களில் 75 சதவீதம், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களால் நிரப்பப்பட்டன. அதில், தற்போது 40 சதவீதம் அரசு உயர்நிலைப்பள்ளி, 35 சதவீதம் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படுகிறது.மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்குரிய சம்பளம் பெறுகின்றனர். புதிய அரசாணையை ரத்து செய்து, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை, மாவட்ட கல்வி அலுவலராக நியமித்தால் தான், பயனுள்ளதாக இருக்கும் என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகி முத்துச்சாமி கூறினார்.
 
         அவர் கூறுகையில், "மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் நியமிப்பதால், அவர்களுக்கு பயனில்லை. பதவி உயர்வு பெற்ற சில மாதங்களில், ஓய்வு பெறுகின்றனர். இதனால், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலராக, பதவி ஏற்க மறுக்கின்றனர். எனவே, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை, மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கும், பழைய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும், என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive